இந்த கோடை வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க லெமன் சோடா பருகலாம். குளிர்பானத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று சோடா.
குறிப்பாக சாப்பிட்ட உணவு அஜீரண கோளாறு காரணமாக சோடாவை வாங்கி குடிப்பதுண்டு.
நாம் அதிகமாக சாப்பிட்டு விட்டால், அல்லது ஏதாவது இறைச்சி ஏதாவது சாபிட்டால் உணவு எளிதாக செரிக்கும் வேண்டும் என்று நினைத்து நாம் அடிக்கடி சோடா குடிப்பது உண்டு.
சிலர் ஜூஸ் வகைகளில் லெமன் சோடாவை விரும்பி குடிப்பார்கள்.
அந்த வகையில் வெயில் காலத்தில் லெமன் சோடாவை அதிகமாக குடிக்க நேர்ந்தால் அதை வீட்டிலேயே சரியான பக்குவத்தில் இப்படி செய்து குடியுங்கள்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை காய் - ஒன்று
எலுமிச்சை பழம் - 2
சர்க்கரை - ஒரு கப்
தண்ணீர் - ஒரு கப்
எலுமிச்சை தோல் துருவல் - ஒரு டீஸ்பூன்
சோடா வாட்டர் - தேவைக்கேற்ப.
செய்முறை:
சர்க்கரை, எலுமிச்சை தோல் துருவல், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும் (சர்க்கரை கரைந்தும் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்).
பிறகு ஆற வைக்கவும். எலுமிச்சை பழம், காய் ஆகியவற்றில் சாறு எடுத்து கொட்டை இல்லாமல் ஆறிய பாகுடன் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
தேவைப்படும் போது ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டிகளைப் போட்டு ஒரு பங்கு எலுமிச்சைச் சாறும் இரண்டு பங்கு சோடாவும் ஊற்றிப் பருகவும். அருமையான லெமன் சோடா ரெடி.