தேவையானவை:
புழுங்கலரிசி - ஒரு கப்,
துருவிய தேங்காய் - ஒரு கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.
மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசைகளாக வார்க்கவும். இந்த தோசையை சுடச்சுட சாப்பிட வேண்டும்.
அப்போது தான் முழுமையான சுவையே. விருப்பப்பட்டவர்கள் சிறிது சர்க்கரையை மாவில் சேர்த்து வார்க்கலாம்.