டேஸ்டியான கொத்து இறைச்சி உருண்டை செய்வது எப்படி?





டேஸ்டியான கொத்து இறைச்சி உருண்டை செய்வது எப்படி?

மட்டனை பொறுத்தவரை, நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும், நன்மை தரும் என்பார்கள். ஆட்டுக் கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது. 
கொத்து இறைச்சி உருண்டை
உடல் சூட்டை தணிக்கக் கூடியது. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது. 

மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. 

அந்த வகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும். இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள். 

இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள். 
இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்க வேண்டுமென்று, இந்த ஆட்டுத் தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.

ஆட்டின் குடல் பகுதியை போட்டி என்பார்கள். செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், போட்டியை சமைத்து சாப்பிடலாம். இதனால், அல்சர் பிரச்சனையும் தீரும்.. 

எனவே, கறியை சாப்பிடுவதற்கு பதிலாக, ஆட்டுக்கறியின் ஒவ்வொரு உடல் பாகத்தையும் சாப்பிடும்போது, ஆரோக்கியம் கூடும். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்கூட, ஆட்டுக்கறியை அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. 

பொதுவாக, சிவப்பு இறைச்சி செரிக்கப்படும் போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 

சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்கிறார்கள்.

சரி இனி ஆட்டு இறைச்சி பயன்படுத்தி டேஸ்டியான கொத்து இறைச்சி உருண்டை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை :

நன்றாக கொத்திய ஆட்டு இறைச்சி - 1/4 கிலோ,

சின்ன வெங்காயம் - 5 கிராம்,

இஞ்சி - 1 துண்டு,

பூண்டு - 5 பல்,

பச்சை மிளகாய் - 5,

சோம்பு - 10 கிராம்,

பொரிக்க - எண்ணெய்,

உப்பு - தேவைக்கு,

சீரகம் - 10 கிராம்,

பொட்டுக் கடலை - 10 கிராம்,

முட்டை - 1.
நெஞ்செரிச்சலை எளிமையாக தடுப்பது எப்படி?
செய்முறை :
சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் நன்றாக கொத்தி கொள்ளவும். பொட்டுக் கடலையை மிக்சியில் பவுடராக அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத் தில் கொத்திய இறைச்சி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு, பொட்டுக் கடலை, முட்டை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து 30 கிராம் அளவு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித் தெடுத்து பரிமாறவும்.
Tags: