கேரட் பாதாம் கீர் செய்வது எப்படி?





கேரட் பாதாம் கீர் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள் :

பால் - 3 கப்

சர்க்கரை - முக்கால் கப்

கேரட் - 2 (அ) 3

பாதாம் பவுடர் - 2 மேசைக்கரண்டி

குங்குமப்பூ - 2 இதழ்

செய்முறை :

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கேரட்டை சிறிய துண்டுக ளாக நறுக்கி, குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி வைக்கவும்.
கேரட் பாதாம் கீர்
காய்ச்சிய பாலில் ஒரு கப் பாலை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து கட்டிகளி ல்லாமல் கரைத்து வைக்கவும். வேக வைத்த கேரட் ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

மீதமுள்ள காய்ச்சிய பாலில் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கொதிக்க வைக்கவும். 

அதனுடன் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.

பிறகு பாதாம் பவுடர் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

சுவையான கேரட் பாதாம் கீர் தயார். குங்குமப் பூவை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.
Tags: