ஒரு பிடி அதிகமாக சாப்பிட தூண்டும் கத்தரிக்காய் பொடிக்கறி சாதம் அல்லது ரொட்டிக்கு ஏற்ற விரைவான, சுவையான சைவ உணவு.
வீட்டில் உள்ள அனைவரும் உங்களை பாராட்டுவார்கள். இதை செய்ய 20 நிமிடங்களே ஆகும். சூடான ரொட்டி, சாதம் மற்றும் சாம்பார் உடன் பரிமாறவும்.
இது ஒரு சிறந்த சைட் டிஷ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கத்தரிக்காய் பொடிக்கறி விரும்பி உண்பர்.
அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
அதனால் இன்று இந்த கத்தரிக்காய் பொடிக்கறி செய்வது எப்படி? என்று இன்றைய சமையலில் பார்ப்போம். .
கத்தரிக்காய் - 3 cup
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தாள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ¼ டேபிள் ஸ்பூன்
நல்எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இன்சுலின் மருந்து போடுவது எப்படி?
செய்முறை : .
பருப்புகள், மிளகாய் வற்றல், தேங்காய் ஆகியவற்றைச் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து மிக்சியில் கொர கொரவென்று பொடித்துக் கொள்ள வேண்டும்.
சோற்று கற்றாழை ஜூஸ் செய்வது !
கத்தரிக்காயில் தண்ணீர் சுண்டி விட்டு, கத்தரிக்காய் வெந்து வரும் போது மிக்சியில் பொடித்த கலவையும், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து,
திறந்த பாத்திரத்தில் வைத்து, வேக வைத்து இறக்க வேண்டும். சுவையான கத்தரிக்காய் பொடிக்கறி ரெடி.