மஞ்சள் கலந்த நீர் குடிப்பதால் உடம்பில் நடக்கும் அதிசயம் !





மஞ்சள் கலந்த நீர் குடிப்பதால் உடம்பில் நடக்கும் அதிசயம் !

மஞ்சள் மிகவும் பிரபலமான மசாலாப் பொருளாகும். இதற்கு அதில் உள்ள மருத்துவ பண்புகளை முதன்மையான காரணமாக கூறலாம். 

மஞ்சள் கலந்த நீர் குடிப்பதால் உடம்பில் நடக்கும் அதிசயம்

முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், 

குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா  மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு. 

மனைவி மகிழ்ச்சியாக இருந்தால்

இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஏஜிங் பண்புகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. அதோடு பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் எதிர்த்துப் போராட வல்லது. 

இத்தகைய மஞ்சளை அன்றாட சமையல் அனைத்திலும் தவறாமல் சேர்த்துக் கொள்வதுடன், அந்த மஞ்சளை நீரில் சேர்த்து கலந்து குடித்தால், அதன் முழு நன்மைகளையும் பெறலாம். 

இதில் மஞ்சள் நீரின்  நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நீர் தயாரிக்கும் முறை

மஞ்சள் நீர் தயாரிக்கும் முறை

முதலில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது மஞ்சள் தூள் கலந்து கொள்ள வேண்டும். 

முக்கியமாக இந்த பானத்தை வெது வெதுப்பான நிலையில் இருக்கும் போதே குடித்து விட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

அதிலும் இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்போது மஞ்சள் நீரை காலையில் எழுந்ததும் குடிப்பதால் பல நன்மைகள் வந்து சேரும்.

தலைவலி பறந்து போகும்

தலைவலி பறந்து போகும்

கஸ்தூரி மஞ்சள் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்றுவலி தீரும். பாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும் நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். 

நீங்கள் கேள்விப்படாத விசித்திரம் நிறைந்த கொடூரமான மரணம் ! 

பசியை உண்டாக்கும். கஸ்தூரி மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில்  தலைவலி பறந்துபோகும்.

வீக்கத்தை எதிர்த்துப் போராடும்

வீக்கத்தை எதிர்த்துப் போராடும்

நாள்பட்ட வீக்கம் / அழற்சியானது பல நோய்களால் ஏற்படலாம். இருப்பினும், மஞ்சள் கலந்த நீரை ஒருவர் ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வரும் போது, 

மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஒரு நல்ல மருந்தாக செயல்படும்.

சர்க்கரை நோயை தடுக்கும்

சர்க்கரை நோயை தடுக்கும்
பல்கலைகழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால் டைப்-2 சர்க்கரை நோயில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்தது. 

எனவே டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பானம் மிகவும் சிறப்பான பானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மூளை ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியம்

ஒரு ஆராய்ச்சியின் படி, அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற அறிவாற்றல் கோளாறுகளுக்கும், 

மூளையில் உள்ள நியூரோட்ரோபிக் காரணி எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை வளர்ச்சி ஹார்மோனின் குறைவிற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டது. 

இது தவிர, இந்த ஹார்மோனின் அளவுகளில் குர்குமின் ஒரு பெரிய விளைவைக் கொண்டிருப்பதாகவும், இதனால் இது சில மூளை நோய்களை மாற்றியமைக்கிறது 

அல்லது வயதானதால் மூளையின் செயல்பாடுகளை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கல்லீரல் பாதுகாப்பு

கல்லீரல் பாதுகாப்பு

மஞ்சள் நீர் நிச்சயமாக கல்லீரலை நச்சு சேதத்திலிருந்து பாதுகாப்பதோடு, சேதமடைந்த செல்களை மீண்டும் உருவாக்குகிறது. 

மேலும் பித்த உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் பித்தப்பை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

மஞ்சளில் உள்ள குர்குமின் பண்புகள், இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளேக் படிகங்களைத் தடுக்கும் மற்றும் இரத்தம் உறைவதில் இருந்து விடுவித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

2011 ஆம் ஆண்டில், உயிரியல் மற்றும் மருந்து புல்லட்டின் இதழ் ஒரு ஆராய்ச்சியை வெளியிட்டது. 

அதில் ஜப்பானில் உள்ள நைகாடா மருந்தியல் மற்றும் பயன்பாட்டு வாழ்க்கை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டது. 

இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஆட்டோஇம்யூன் இதய நோய் உள்ள ஆண் எலிகளின் இதய ஆரோக்கியம் மூன்று வார காலத்திற்குள் மஞ்சள் நீரை உட்செலுத்தியதால் மேம்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். 

இதனால் தான் மஞ்சள் நீரைக் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

தினமும் மஞ்சள் கலந்த நீரைக் குடிப்பதால், அது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பித்தநீரின் வெளியீட்டையுத் தூண்டும். 

எனவே நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனையால் அவஸ்தைப் படுபவராயின், மஞ்சள் நீரை ஏழு நாட்கள் தொடர்ந்து குடியுங்கள்.

வயிறு இறுகும்

வயிறு இறுகும்

மஞ்சள் தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளி பிரச்சனையும் சரியாகும். 

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக  இது உதவுகிறது.

முதுமை தடுக்கப்படும்

முதுமை தடுக்கப்படும்

வயதானதற்கான முக்கியமான காரணிகளில் ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் காயங்கள் உள்ளன. ஆனால் மஞ்சளில் உள்ள குர்குமின், இவற்றின் செயல்பாட்டை வெற்றிகரமாக தடுக்கிறது. 

மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும்.

Tags: