சத்து மிக்க இறால் வடை செய்வது எப்படி?





சத்து மிக்க இறால் வடை செய்வது எப்படி?

இறால் என்பது பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். கடல்வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. 

இறால் வடை செய்வது
இவற்றில் கழிவுப் பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. மற்ற கடல் உணவுப் பொருட்களைப் போல் இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. 

இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

இத்தகைய சத்து மிக்க இறாலில் வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள் :

இறால் – 100 கிராம்

உடைத்த கடலை – ஓரு கப்

கடலை மாவு – அரை கப்

வெங்காயம் – பெரியது 1

பச்சை மிளகாய் – 5

பூண்டு – 6 பல்

இஞ்சி – சிறிய துண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

சோம்பு – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

இறாலை உரித்துக் சுத்தம் செய்து உப்பையும், மஞ்சள் பொடியையும் கலந்து தண்ணீரில் வேக வைத்து ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். உடைத்த கடலையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை அம்மியில் நசுக்கிக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் வேக வைத்து அரைத்த இறால், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மசாலா, அரைத்த உடைத்த கடலை, 

கடலை மாவு, உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாகப் பிசையவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெய் விட்டுக் கொதித்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். சுவையான இறால் வடை தயார்.

Tags: