தேவையானவை
கோழி - 1/2 கிலோ
வெங்காயம் - 1
வினிகர் - 1/4 கப்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சோயாசாஸ் - 1/2 கப்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
அஜினோ மோட்டோ - 1/4 டீஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
முதலில் கோழியை எலும்புடன் சிறு உருண்டைத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து வைக்க வேண்டும் . பின்பு வெங்காய த்தை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் கழுவிய கோழித் துண்டுகளைப் போட்டு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம், மிளகுத் தூள், மஞ்சள் தூள், சோயாசாஸ், வினிகர், நல்லெண்ணெய், அஜினோ மோட்டோ மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
.பிறகு ஊற வைத்துள்ள கோழித்துண்டு கலவையை 1 மணி நேரம் கழித்து அப்படியே எல்லா வற்றையும் குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 1- 2 விசில் விட்டு அரை வேக்காடு வேக வைத்து குக்கரை இறக்கவும்.
பின்பு கார்ன்ஃப்ளார் மாவு, மைதாமாவு இவற்றை ஒன்றாக போட்டு சிறிது தண்ணீர் விட்டு கட்டிதட்டாமல் கரைத்து வைக்கவும். பின் வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் விட்டு அது காய்ந்ததும்.
குக்கரில் இருந்து கோழித் துண்டுகளை மட்டும் எடுத்து கரைத்து வைத்தி ருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் இரண்டிரண் டாக போட்டு நன்றாக பொரித்து சிவந்ததும் எடுக்க வேண்டும் .