தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப் (வறுத்து ரவையாக உடைக்கவும்),
துருவிய இஞ்சி, மாங்காய் – சிறிதளவு,
ஊற வைத்த கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – கொத்த மல்லி விழுது – சிறிதளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
இரண்டு கப் தண்ணீரை கொதிக்க விட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப் பருப்பு,
உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் – கொத்த மல்லி விழுது,
பச்சரிசி ரவை சேர்த்துக் கிளறி இறக்கி, உருண்டை களாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.