தேவையானவை:
சர்க்கரை வள்ளிக் கிழங்கு – இரண்டு இன்ச் அளவு,
காய்ந்த மிளகாய் – 10,
பூண்டு – 4 பல்,
பெரிய வெங்காயம் – ஒன்று,
லெமன் க்ராஸ் – ஒரு விரல் அளவு,
வேர்க்கடலை கரகரப்பாகப் பொடித்தது – 2 டேபிள் ஸ்பூன்,
புளித்தண்ணீர் – கால் கப்,
பிரவுன் சுகர் (அ) சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன்,
கடலை எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
காய்ந்த மிளகாயை வெந்நீரில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயம், தோல் நீக்கிய பூண்டு, காய்ந்த மிளகாயை நறுக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவைத்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து,
லெமன் க்ராஸ், அரைத்த மசாலா சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
எண்ணெய் பிரியும் போது அரைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
கொதித்ததும் புளித்தண்ணீர், உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலக்கி ஒரு கொதி வந்ததும்
பொடித்த வேர்க்கடலை சேர்த்துப் புரட்டி மிதமான தீயில் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.