தேவையான பொருட்கள் :
சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா பாதி அளவு,
தக்காளி - 1,
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்,
புதினா - ஒரு டேபிள் ஸ்பூன்,
ஓரிகானா - அரை டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மிளகு தூள் - அரை டீஸ்பூன்,
தேன் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவை யான அளவு.
செய்முறை :
மூன்று நிற குடை மிளகாய் களையும் நீளவாக்கில், மெல்லிய தாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி யையும் மெல்லிய நீள வில்லை களாக நறுக்கவும்.
புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, தேன், எலுமிச்சைச் சாறு, ஓரிகானா, புதினா, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதனுடன் நறுக்கி வைத்தி ருக்கும் குடை மிளகாயை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.