தேவையானவை:
பச்சரிசி, துவரம் பருப்பு – தலா 1 கப்,
காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட்) – 2 கப்,
சின்ன வெங்காயம் – 10,
தக்காளி – 5,
சாம்பார் தூள் – 2 டேபிள் ஸ்பூன்,
புளி கரைசல் – அரை கப்,
பெருங்காயம், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்,
கடுகு, உளுந்து – தலா 1 டீஸ்பூன்,
எண்ணெய், நெய் – தலா 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
* காய்களை விரல் நீளத் துண்டு களாகவும், வெங்காயம், தக்காளியை பொடி யாகவும் நறுக் குங்கள்.
* அரிசி, பருப்புடன் ஆறு கப் தண்ணீர், காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு ஆகிய வற்றைச் சேர்த்து வேக வையுங்கள்.
* இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
* வாணலி யில் எண்ணெய், நெய்யை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காய த்தை வதக்குங்கள்.
* பிறகு தக்காளி, சாம்பார் தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, புளி கரைசல், மஞ்சள் தூள்,
பெருங்காயத் தூள், உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகிய வற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பருப்பு சாதக் கலவை யோடு சேர்த்துக் கலக்குங்கள்.