சூப்பரான கேரளா பழ பிரியாணி செய்வது எப்படி?





சூப்பரான கேரளா பழ பிரியாணி செய்வது எப்படி?

அதிகமாக இஸ்லாமிய சகோதர்கள் வீடுகளில் அதிகாமாக பிரியாணி செய்யும் வழக்கம் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
சூப்பரான கேரளா பழ பிரியாணி செய்வது எப்படி?
இதனால், முக்குக்கு முக்கு பிரியாணி விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப் படுவதுண்டு. 

தற்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை விதவிதமான பிராணி வகைகள், நல்ல பொறப்பு தான் ருசித்து சாப்பிட கிடைத்துள்ளது. 

ஆரம்பத்தில், பாரசீகத்தில் காட்டில் வேட்டையாடும் விலங்குகளின் இறைச்சியையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டது தான் பிரியாணியாக உருவானது. 

முதலில் வெறும் மசாலாக்களை மட்டுமே பயன்படுத்திய பாரசீகர்கள், நாளடைவில் நறுமணத்திற்காக பல வாசனைப் பொருட்களையும் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். 
தற்போது இறைச்சியை ஒன்றாக சமைத்து சாப்பிடுவதே பிரியாணி என்ற நிலை மாறி, காய்கறி, முட்டை, இறால் என் பல பொருட்களை வைத்து பிரியாணி செய்யப்படுகிறது. 
தேவையானவை :

பிரியாணி வாசனைத் திரவியம் 

உப்பு - தேவையான அளவு 

பிரியாணி கலர் போடி 

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு 

அன்னாசி பழம் - 250 கிராம் 

மஞ்சள் தூள் - இரண்டு தே.கரண்டி 

பச்சை மிளகாய் - 10 எண்ணம் 

பிரியாணி மசாலா - 50 கிராம் 

தக்காளி - அரைக் கிலோ 

டால்டா - 250 கிராம் 

உலர் திராட்சை - 100 கிராம் 

கோழி அல்லது ஆட்டுக்கறி - ஒரு கிலோ 

இஞ்சி பூண்டு விழுது - 100 கிராம் 

பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ 

தேங்காய் எண்ணெய் - 100 கிராம் 

முந்திரி பருப்பு - 100 கிராம் 

தயிர் - 100 கிராம் 

வெங்காயம் - ஒரு கிலோ 

மல்லித்தளை மற்றும் புதினா இல்லை - தேவையான அளவு

செய்முறை : 
கேரளா பழ பிரியாணி
கேரளா பழ பிரியாணி முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணையை ஊற்றவும், பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை போடவும். வெங்காயம் நாற்றாக வதங்கிய உடன் பச்சை மிளகாவை போடவும். 
மீண்டும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் மஞ்சள் பொடியை போடவும் பிறகு நறுக்கி கழுவி வைத்த இறைச்சியை பொட்டு நன்றாக கிளக்கவும். இறைச்சி வெங்காய த்துடன் வதங்கி வரும் பொழுது நறுக்கிய தக்காளியை போடவும். 

பிறகு அரைத்த இஞ்சி, பூண்டை போடவும் பிறகு சிறிது உப்பு சேர்த்து நன்றாக இளக்கவும். பிறகு பிரியாணி மசாலாவை போட்டு மீண்டும் நன்றாக இளக்கவும்.

பிறகு சிறிது தயிரை ஊற்றவும், பிறகு மசாலாவும் இறைச்சியும் ஒன்று சேர்ந்து வெந்தவுடன் அதை இறக்கி வைக்கவும். 

பிரியாணி மசாலா ரெடி ஒரு காலியான பெரிய பாத்திரத்தை எடுக்கவும் அதில் முதலில் இறைச்சி மசாலாவின் கொஞ்சப் பகுதியை போடவும். பிறகு வடித்த பாஸ்மதி சோற்றின் அரைப்பங்கை போடவும் அதை மேலோட்ட மாக சமப் படுத்தவும். 

பிறகு பிரியாணி கலர் பொடியை சிறுது தண்ணீரில் கலக்கி அதன் மேல் சிறிதாய் தொளிக்கவும். 

பிறகு மல்லி, புதினா, மற்றும் முந்திரி வதக்கிய வெங்காயம் .மற்றும் அன்னாசி பழத்தையும் போட்டு பிறகு இளகிய அரை டால்டாவை சுற்றி ஊற்றவும். 

பிறகு இரண்டாம் நிலைக்கு வந்து மீதியுள்ள மசாலா சோர் மற்றும் எல்லாப் பொருட் களையும் முதலில் செய்த போல் மறுபடியும் செய்யவும். 
இறுதியாக பிரியாணி வாசனை திரவியத்தை எல்லா பக்கமும் தொளிக்கவும். பிறகு ஒரு நல்ல மூடியிட்டு மூடி அப்பாத்தி ரத்தை அடுப்பில் ஏற்றி சிறிய அளவு தீ இடவும். 
5 நிமிடத் திற்கு பிறகு வாசனைத் திரவியம் சூடாக்கி வாசம் வந்தவுடன் தீயை அணைக்கவும். அரை மணி நேரம் கழித்து மூடியைத் திறந்து ஒரு பாகமாக கரண்டி யால் பிரியாணியை எடுத்து சாப்பிடும் பாத்திரத்தில் பரிமாறவும். 

சுவையான கேரளா ஸ்பெஷல் பிரியாணி தயார்
Tags: