தேவையானவை:
வட்டமாக நறுக்கிய துண்டுகள் - 2
மிளகாய்த் தூள் - இரண்டு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிது
உப்பு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்து விட்டு கிழங்கைப் போட்டு ஒரு கிண்டு கிண்டி,
அதுனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
கிழங்கு ஏற்கனவே வெந்து விட்ட படியால் ரொம்ப நேரம் வேகத் தேவை யில்லை.
மிளகாய்த் தூள் கிழங்குடன் நன்றாகக் கலந்து பச்சை வாசனை போய் நன்றாக சிவந்து வந்ததும் இறக்கி விடவும்.
இடை யிடையே கிளறிவிட்டால் போது மானது. இது எல்லா சாதத்து டனும் நன்றாக இருக்கும்.