சென்னாகுனி தூள் செய்வது எப்படி?





சென்னாகுனி தூள் செய்வது எப்படி?

இது இட்லிக்கான தூள். இந்த தூள் இருந்து விட்டால் இட்லி கணக்கில் லாமல் உள்ளே போகும். அவ்வளவு சுவையாக இருக்கும். 
சென்னாகுனி தூள் செய்வது எப்படி?
அதன் சுவைக்கு ஈடு இணை ஏதும் கிடையாது. பின்னாளில் உதவுமே என இப்போதைக்கு பதிந்து வைத்துக் கொள்கிறேன்.

காராமணி குப்பம் சந்தைக்கு போய் இந்த சென்னா குனியை வாங்கி வருவாங்க. 
இது இளம் ஆரஞ்சு நிறத்தில் அல்லது வெண்ணி றத்தில் இருக்கும், பொடி கருவாடு. 

நைநை’னு யாராவது தொந்தரவு பண்ணினா, சென்னாகுனி மாதிரி அரிச்சு எடுக்குற னு சொல்லு வாங்க .

இங்கு இது கிடைப்பது இல்லை. அதனால் என்னிடம் சென்னா குனியின் படம் இல்லை. அதனால் பதிவு மட்டுமே .

அளவுகளும் இன்னின்ன அளவுகள் என்று கிடையாது. அப்படியே போட்டுக் கொள்ள வேண்டியது தான். 

வீட்டில் சின்னபடி, பெரியபடி என்று இருக்கும். எத்தனை கப்புகள் வரும் என்றெல் லாம் தெரிய வில்லை. 
அதில் ஒரு சின்னபடி அளவுக்கு பொட்டுக் கடலையும், ஒரு கை அளவுக்கு சின்னா குனியும், காரத்துக்கு காய்ந்த மிளகாயும், சுவைக்கு உப்பும் இருந்து விட்டால் தூள் ரெடி பண்ணிடு வாங்க.

செய்முறை:

சென்னாகுனி தூள் செய்வது எப்படி?
சென்னாகுனியில் மணல் இருக்கலாம். அதனால் அவற்றை முறத்தில் போட்டு லேசாகத் தேய்த்தாற் போல் செய்து புடைத்து பிரிச்சிடு வாங்க.
பிறகு இரும்பு வாணலை அடுப்பில் ஏற்றி, சூடானதும் சின்னா குனியைப் போட்டு வாசம் வரும் வரை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொண்டு, 

அதே வாணலில் மிளகாயைப் போட்டு சூடேறும் வரை நிறம் மாறாமல் வறுத்துக் கொண்டு, 

தீயை அணைத்து விட்டு பொட்டுக் கடலையை யும் அதே வாணலி லேயேப் போட்டு விட்டால் அதுவும் சூடேறி விடும். 
வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
பிறகு இவை ஆறியதும் உரலில் கொட்டி, உப்பு சேர்த்து இடித்து, சலித்து, காற்று புகா டப்பாவில் வைத்துக் கொண்டால் இட்லிக்கு அருமை யான தூள் ரெடி.

இந்தத் தூளும், சாதாரண இட்லித் தூளும், சட்னியும், சாம்பாரும் இருந் தாலும் நாங்க எல்லோரும் இட்லி தோசைக்கு முதலில் எடுப்பது இதுவாகத் தான் இருக்கும். 

இந்தத் தூளுக்கு நல்லெண்ணெய் எல்லாம் விட்டு சாப்பிடக் கூடாது. கிடைக்கும் பட்சத்தில் நீங்களும் செய்து பார்க்க லாமே !
Tags: