தேவையானவை:
நடுத்தர அளவிளான புரோக்கலி -1
கேரட் - 1
சின்ன வெங்காயம் - இரண்டு அல்லது மூன்று
பச்சை மிளகாய் - ஒன்றிரண்டு
வெந்து பிழியப் பட்ட துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்து மல்லி இலை - கொஞ்சம்
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
சாம்பாரு க்கு வேக வைத்த துவரம் பருப்பில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கொஞ்சம் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
கேரட், புரோக்கலி இரண்டை யும் நன் றாகக் கழுவி விட்டு சிறு சிறு துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காய த்தையும் அவ்வாறே நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.காரம் விரும்பி னால் பொடியாக்க லாம்.
வாணலை அடுப்பி லேற்றி எண்ணெய் விட்டு காய் ந்ததும் தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்து விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கி யதும் நறுக்கி வைத்துள்ள கேரட், புரோக்க லியைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி,
லேஸாக உப்பு தூவி, சிறிது தண்ணீர் தெளித்து மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.
புரோக்கலி சீக்கிரமே வெந்து விடும். கேரட்டும் கூட மெல்லிய துண்டு களாக இருப்ப தால் சீக்கிரமே வெந்து விடும்.
இவை வெந்ததும் பிழிந்து வைத்துள்ள பருப்பை சேர்த்துக் கிளறி விட்டு சூடேறியதும், தேங்காய்ப்பூ, கொத்து மல்லி இலை தூவி
மேலும் ஒரு கிளறு கிளறி இறக்கவும். இப்போது எளிதாக செய்யக் கூடிய கேரட் & புரோக்கலி பொரியல் தயார்.
இது எல்லா சாதத் திற்கும் நன்றாக இருக்கும்.