தேவை யானவை:
கோஸ் நறுக்கியது - ஒரு கிண்ணம்
பச்சை மிளகாய் - 1
தேங்காய்ப் பூ - ஒன்றிரண்டு டீஸ்பூன்கள்
கொத்து மல்லி இலை
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப் பிலை
செய்முறை:
கோஸி லிருந்து முழு இலை களாகப் பிரித்தெடு த்துக் கழுவி விட்டு, நீரை வடித்து விட்டு,
இலை களின் நடுவி லுள்ள தண்டை நீக்கி விட்டு, இலை களை மட்டும் நீள வாக்கில் மிக மெல்லி யதாக நறுக் கவும்.
காரம் விரும் பினால் பச்சை மிளகாயைப் பொடி யாகவும், இல்லை யென்றால் லேசாகக் கீறியும் வைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பி லேற்றி எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டி யவைகளைத் தாளித்து விட்டு,
மிளகாயைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி, கோஸை சேர்த்துக் கிளறி, சிறிது உப்பு தூவி மூடி போடாமல் வேக விடவும்.மூடினால் நிறம் மாற வாய்ப் புண்டு.
கோஸ் சீக்கிரமே வெந்து விடும். வெந்த பிறகு தேங்காய்ப் பூ,கொத்து மல்லி தூவி இறக்கவும்.