இரத்த சோகைக்கு சாப்பிட கூடியதும், கூடாததும் !





இரத்த சோகைக்கு சாப்பிட கூடியதும், கூடாததும் !

0

நம்  உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையோ அல்லது ஹீமோ குளோபினின் அளவோ எப்போதும் இருக்கின்ற அளவினை விட குறைந்து காணப்பட்டால் அது இரத்த சோகை (Anemia) என்றழைக்கப்படும். 

இரத்த சோகைக்கு சாப்பிட கூடியதும், கூடாததும் !
உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்த உதவும் ரத்த சிவப்பணுக்கள் புரதமும் இரும்பும் சேர்ந்தது, 'ஹீமோ குளோபின். RBC இரத்த சிவப்பணுக்களினை உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து அவசியமான ஒன்றாகும். 

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோ குளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. 

நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோ குளோபின்கள் தான்.

இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லாமல் போகும்

இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லாமல் போகும் பொழுது உடலுக்கு தேவையான Oxygen-ம் கிடைக்காமல் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு நிறைய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளும் வரும்.

வழக்கமாக ஹீமோ குளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மூன்று தரப்புக்கும் சிறிது வித்தியாசப்படும். 

ஆண்களுக்கு சராசரியாக 14.5 முதல் 15.5gm/dl, பெண்களுக்கு 13.5 முதல் 14.5 gm/dl இருக்க வேண்டும், குழந்தைகளுக்கு 16 முதல் 17 gm/dl என கொஞ்சம் அதிகமாக இருக்கும். 

(ஒரு லிட்டர் ரத்தத்தில் 10ல் ஒரு பாகத்தை எடுத்துக் கொண்டு, அதற்குள் எத்தனை கிராம் ஹீமோ குளோபின்கள் இருக்கின்றன என்பதைக் கணக்கிடுவார்கள்.

இரும்புச்சத்து கிடைக்காத போதும் ரத்தசோகை ஏற்படுகிறது

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லாத் தரப்பினருக்கும் ரத்தசோகை ஏற்படும் என்றாலும், பெண்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். 

பருவம் அடைவது, மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் இயல்பாகவே அதிக ரத்த இழப்பை சந்திக்கிறார்கள். 

தாய்ப்பால் கொடுக்கிற பெண்களுக்கு தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காத போதும் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கும் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும். 

அதனால், பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது.

இரத்த சோகை ஏற்பட காரணங்கள்?

இரத்த சோகை ஏற்பட காரணங்கள்?

அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பது, பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது, 

சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போவது, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகளால் அதிக ரத்தப் போக்கு போன்றவை முக்கிய காரணங்கள். 

இது தவிர, பிரதான காரணம், பி12 வைட்டமின் குறைபாடு. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் என்பதில்லை. உடலில் எந்த ஒரு செல் வளர வேண்டும் என்றாலும் அதன் வளர்ச்சி ஊக்கி,

வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும், ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு வளராமல் இரத்த சோகை ஏற்படும்.

இரத்த சோகையால் ஏற்படும் பிரச்னைகள்?

இரத்த சோகையால் ஏற்படும் பிரச்னைகள்?

பிரசவத்தின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்த இழப்பு, இரத்த சோகை இருந்தால், உயிருக்கே ஆபத்தாக முடியலாம். 

தாய்க்கு இரத்த சோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. 

குழந்தைக்கும் இரத்த சோகை ஏற்படலாம். வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையில், நரம்புகள் சேதம் அடையும் வாய்ப்பு இருக்கிறது. 

நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு, வைட்டமின் பி12 போதுமான அளவில் இருப்பது அவசியம். 

அதிக ஆண்டுகள் சைவ உணவுகளையே சாப்பிடுபவர்களுக்கு வர வாய்ப்பிருக்கிறது. காரணம், வைட்டமின் பி12 பெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் கிடைக்கும்.

உங்கள் தங்க நகைகள் தொலைந்து போகாமல் இருக்க !

அறிகுறிகள் :

உடல் வலி, மிகுந்த களைப்பு, மூச்சு திணறல், தலைசுற்றல், செரிமானமின்மை, பசியின்மை, மன அழுத்தம், முடி உதிர்தல், 

சருமத்தில் மஞ்சள் நிற மாற்றம், வேகமான இதயத்துடிப்பு, உணர்ச்சியற்ற பாதங்கள், எளிதில் உடையக்கூடிய விரல் நகங்கள், மற்றும் தலைவலி.

நிறமற்ற கண்கள் : 

நிறமற்ற கண்கள்

ஒருவர் உண்மை சொல்கிறார்களா அல்லது பொய் கூறுகிறார்களா என்பதை அவர்களின் கண்களை வைத்து அறிந்துக் கொள்ள முடியும் என்று பலர் கூற கேட்டிருப்போம். 

அது மட்டுமின்றி, இரத்த சோகை இருக்கின்றதா என்பதனையும் கண்டுபிடிக்க முடியும். 

அதற்கு கண்ணின் கீழ் இமையை கீழ் நோக்கி இழுக்கும் பொழுது, அடியில் உள்ள பகுதியானது சிவப்பு நிறமின்றி நிறமற்று காணப்பட்டால் அது இரத்த சோகைக்கான அறிகுறியாகும்.

வெண்மையான விரல்கள் : 

வெண்மையான விரல்கள்

ஒருவர் ஆரோக்கியமுடன்  இருப்பதை அறிந்துக் கொள்ள அவர்களது கை விரல்களை அழுத்தும் பொழுது தெரிந்து விடும். 

ஏனெனில், ரத்தமானது நாம் விரலினை அழுத்தும் பொழுது விரல் முனைக்கு வரும் அப்படி வராது விரல் நுனி வென்மையாகவே காணபட்டால் இரத்த சோகை இருப்பதாக அர்த்தம்.

குமட்டல் : 

குமட்டல்

காலையில் படுக்கையில் இருந்து எழ முடியாமல் மயக்கமோ அல்லது குமட்டலோ வரும்.

மூச்சு திணறல் : 

மூச்சு திணறல்

இரத்த சோகை இருந்தால் நம்மால் சரியாக சுவாசிக்க முடியாது. ஏனென்றால், Oxygen-ஐ சுமந்து செல்லும் இரத்தமானது குறைவாக இருக்கும் பொழுது சிறிது நேரம் நடந்தாலே, 

நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !

அதிகமாக மூச்சு வாங்கும் அது மட்டுமில்லாது குறைவான Oxygen இதயத்துக்கு கிடைப்பதால் இதயமானது படபடப்புடன் இருக்கும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

குளிர் பானங்கள், Tea, Coffee, Ice Cream மற்றும் Chocolate.

உண்ண வேண்டியவை :

இரத்த சோகை இருக்கும் பொழுது இரும்புச் சத்துள்ள உணவினை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகள் : 

கீரை வகைகள்

முருங்கைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கிரை மற்றும் மணத்தக்காளிக் கீரை.கீரை-வகைகள்

காய்கறிகள் : 

காய்கறிகள்

பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழக்காய், Carrot, காலிபிளவர், இஞ்சி, தக்காளி, புதினா, பீன்ஸ், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை.

காய்கறிகள் கனிகள் : 

காய்கறிகள் கனிகள்

சீதாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளம்பழம், தர்பூசணி, சப்போட்டா, பேரீட்சை, வாழைப்பழங்கள், Apple, ஆரஞ்சு, 
பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !

பிளம்ஸ், அத்திப்பழம், பப்பாளி, மாம்பழம், பலாபழம், நெல்லிக்கனி, உலர்ந்த திராட்சை மற்றும் எலுமிச்சை பழம்.கனிகள்

தானியங்கள் மற்றும் பருப்பு : 

தானியங்கள் மற்றும் பருப்பு
கம்பு, கேழ்வரகு, கொள்ளு, கோதுமை, சாமை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, உளுந்தங்களி, Oats, சுண்டல், முந்திரி, சோயாபீன்ஸ் மற்றும் பட்டாணிதானியங்கள்-மற்றும்-பருப்பு

இறைச்சி வகைகள் : 

இறைச்சி வகைகள்
ஆட்டுக்கறி, ஈரல்,  முட்டை, மீன் மற்றும் இறால்

மேல் கண்ட அறிகுறிகளை நீங்கள்  உணர்ந்தால், உடனே இரத்த பரிசோதனை செய்து Haemoglobin அளவினை தெரிந்துக் கொண்டு முறையான உணவு முறைகளை கடைபியுங்கள்.

சிரிப்பு ஏற்படுத்தும் நன்மைகள் !

உண்ணும் உணவே மருந்து. ஆதலால்; நாம் எடுத்துக் கொள்ளும் உணவு சரியாக இருந்தால் எவ்வித நோயும் நம்மை அண்டாது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)