புடலங்காய் ஒரு மூலிகை... அதன் பலன்கள் தெரியுமா?





புடலங்காய் ஒரு மூலிகை... அதன் பலன்கள் தெரியுமா?

0

புடலங்காயில் நீர்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் அது உடலில் உள்ள கழிவுகளை டீடாக்ஸ் செய்து சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியாக வெளியேற்றும் தன்மை கொண்டது. 

புடலங்காய் ஒரு மூலிகை... அதன் பலன்கள் தெரியுமா?
இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்களும் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் மலச்சிக்கல் போன்ற பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியது. 

இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் என்ன மாதிரியான ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

இரண்டு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை !

புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்து விடும்.

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

அதிக உடல் சூட்டால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்த மல்லி சேர்த்து 

300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை கட்டுப்படும்.

இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டி  வீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.

புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.

டேஸ்டியான பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி?

கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250 கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200 மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்....

புடலங்காயை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் நீர்ச்சத்து அதிகம் கொண்ட இந்தெ புடலங்காயில் அதிகப் படியான அளவில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச் சத்துக்கள் இருக்கின்றன.

புடலங்காய் ஒரு மூலிகை... அதன் பலன்கள் தெரியுமா?

இது எலும்புகள் தேய்மானத்தைத் தடுத்து உறுதியாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்கச் செய்கிறது. குறிப்பாக 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு எலும்புத் தேய்மானம் அடைய ஆரம்பிக்கும். 

அவர்கள் உணவில் அடிக்கடி புடலங்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. 

நம்முடைய கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன்? தெரியுமா?

அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகிய ஊட்டச் சத்துக்களும் மிகக் குறைந்த கலோரியும் கொண்ட காய் என்றால் அது புடலங்காய் தான். 

இந்த புடலங்காயை சாம்பார், கூட்டு, பொரியல் என சமைத்தும் சாப்பிடலாம். உள்ளே உள்ள விதைகளை நீக்கி விட்டு ஜூஸாகவும் செய்து குடிக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)