குழம்பு என்பது, இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மற்றும் இலங்கை நாடுகளில் சமைக்கப்படும் பொதுவான உணவுப் பொருளாகும்.
இது பெரும்பாலும் புளித்தண்ணீர், மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது. சில சமயங்களில் பருப்பு பயன்படுத்தப்படுகிறது.
தேவையானவை :
பச்சை மிளகாய் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 100 மில்லி லிட்டர்
கால் வெடிப்பால் அவஸ்தையா? கவலைய விடுங்க !
செய்முறை :
மிளகாயை வட்ட வடிவமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
நுங்கு சாப்பிடுவதால் நன்மைகள் !
நன்றாக வதங்கிய பின், புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் போட்டுக் கிளறவும்.
மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டியானதும் இறக்கி, பரிமாறவும். ஊறுகாய் போல் பயன்படுத்துவதற்கு ஏற்றது.