தேவையானவை :
மாங்காய் துண்டுகள் - 2 கப்
மிளகாய்த் தூள் - 2 மேஜைக் கரண்டி
வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
கடுகுத் தூள் - 1
நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்
பெருங்காயத் தூள் - 1 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?
செய்முறை :
மாங்காய் துண்டுகளை அகலமான பாத்திரத்தில் போட்டு வைக்கவும். வெந்தயத்தூளை வறுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தீயை அணைத்து விட்டு, பெருங்காயத்தூள் போட்டு ஆற விடவும்.
எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !
மாங்காய் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், உப்புத்தூள், கடுகுத்தூள், வெந்தயத்தூள் இவற்றைப் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
அதன்பின் பெருங்காயத்தூள் கலந்த எண்ணெய்யை சேர்த்து மறுபடியும் நன்றாக கிளறிய பின் பாட்டிலில் எடுத்து வைத்து, தேவையான போது பயன்படுத்தவும்.