பிஷ் சூப் வித் டமரின்ட் அண்ட் ஜிஞ்சர் செய்வது எப்படி?





பிஷ் சூப் வித் டமரின்ட் அண்ட் ஜிஞ்சர் செய்வது எப்படி?

0

தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. 

பிஷ் சூப் வித் டமரின்ட் அண்ட் ஜிஞ்சர் செய்வது எப்படி?

கோழி, மட்டன் போன்ற மாமிச உணவுகளுக்கு பதிலாக அன்றாடம் மீன் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரியான கொலஸ்ட்ராலில் இருந்து தப்பிக்கலாம். 

மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், மீன் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. 

மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. 

CFL -சி. எஃப். எல். பல்பு கைத்தவறி விழுந்தால் என்ன ஆகும்?

நீங்கள் தவறாமல் மீன் சாப்பிடுவதால் நீரிழிவு நோய், முடக்கு வாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படும். சாதாரணமாக மூட்டுகளில் ஏற்படும் நாள்பட்ட வீக்கத்தின் காரணமாகத் தான் முடக்குவாதம் ஏற்படுகிறது. 

இந்த முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க வேண்டும் என்றால் உணவில் மீனை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தேவையானவை :

சிறியதாக நறுக்கிய மீன் துண்டுகள் - 500 கிராம்

புளித்தண்ணீர் - அரை கப்

சின்ன வெங்காயம் - 4

நறுக்கிய கொத்தமல்லி தண்டு - 2 மேஜைக்கரண்டி

முழு மிளகு - 1 தேக்கரண்டி

இஞ்சி துறுவல் - அரை கப்

ஃபிஷ் ஸாஸ் - 4 மேஜைக்கரண்டி

பனங்கற்கண்டு (Palm Sugar)- 4 மேஜைக்கரண்டி

நறுக்கிய வெங்காயத்தாள் - 2 மேஜைக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகு, கொத்தமல்லி தண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரைத்த பொருட்களைப் போட்டுக் கிளறவும்.

அதன்பின் ஃபிஷ் ஸாஸ், மீன் துண்டுகள், புளித் தண்ணீர், பனங்கற்கண்டு, இஞ்சித் துறுவல், வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும்.

அனைவரும் விரும்பும் லட்சா பரோட்டா செய்வது எப்படி?

ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

உப்பு, இனிப்பு சுவை சரி பார்த்த பின் சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)