தினமும் நாட்டு மாடு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !





தினமும் நாட்டு மாடு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !

0

நாட்டு மாடுகள் நமக்கு தரும் உணவு சத்தானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், உடலும் ஆரோக்கியமாக மாறுகிறது. 

தினமும் நாட்டு மாடு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !
இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம். 

நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை (கலப்பினத்தில் அது தான் இருக்கிறது). நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை.

கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன் குறைபாடான மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. பால் மிக அதிகமாக கொட்டும் என்பது மட்டுமே இதன் பலன். 

இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது. கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. 

உலகின் மிக அதிகமான விலை உயர்ந்த உணவுகள்?

அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது. நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை! 

வீட்டில் வளர்க்க இயலவில்லை எனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள். 

சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட நாட்டு மாடு பாலை அருந்தலாம். உண்ணும் உணவுப் பொருட்களிலேயே நாட்டு மாடு பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. 

பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. 

மாங்கொட்டையில் உள்ள நன்மைகள் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் !

பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு, சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பல விதமான சத்துக்கள் உள்ளன.

மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் நாட்டு மாட்டு பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்துக்கின்றனர்.

ஆனால். நம்மில் எத்தனை பேர் தினமும் பால் குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறோம். குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் பால் குடிப்பதை அதிகம் விரும்புவதில்லை. 

குறிப்பாக பெண்கள், பால் குடித்தால் குண்டாகி விடுவோம், முகப்பரு வந்து விடும் என்று பல காரணங்களை காட்டி பால் குடிப்பதை தவிர்த்து வருகிறோம்.

ஆனால், உண்மையில், தினமும் நாட்டு மாடு பால் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்..

ஆஸ்துமா மாதவிடாய் நின்று விட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. 

இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். நாட்டு மாடு பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.

பெண்கள் உண்ணக்கூடிய உணவுகளில் முக்கியமான உணவுகள் என்ன?

இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் நாட்டு மாடு பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் நாட்டு மாடு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !

சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட நாட்டு மாட்டு பாலை அருந்தலாம். நாட்டுமாடு பாலில் வைட்டமின் பி12 உள்ளது. 

இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், வயிறு நிரம்பி ஆரோக்கியம் கிடைக்கும்.

கொரோனா தடுப்பூசி போட்ட பின் அறிகுறி இல்லை எனில் என்ன அர்த்தம்?

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

நாட்டு மாடு பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)