அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஷ்ரூம் 65 செய்வது எப்படி?





அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஷ்ரூம் 65 செய்வது எப்படி?

0

காளான்கள் சிடின் மற்றும் பீட்டா-குளுக்கனின் நல்ல மூலமாகும், இது கொழுப்பை குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஷ்ரூம் 65 செய்வது எப்படி?
இந்த காளான்கள் பல்துறை திறன் கொண்டவை. அவை உலகெங்கிலும் உள்ள மக்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, காளான்களை தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர். 

காளான்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நன்மைகளையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, 

குறிப்பாக அவை பீட்டா - குளுக்கன்களை கொண்டிருப்பதால் பல நன்மைகளை அளிக்கிறது. காளான்கள் குறைந்த தாவர புரதங்களால் நிரம்பியுள்ளன. 

மேலும் மிகக் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் இவை கொண்டுள்ளன. காளான்களில் குளுட்டமேட் ரிபோ நியூக்ளியோடைடுகளும் உள்ளன. 

அவை உப்பின் சுவையைத் தருவது மட்டுமல்லாமல், சமைக்கும் போது உப்பு சேர்ப்பது கிட்டத்தட்ட தேவையற்றதாகவும் இருக்கும். 

இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இறுதியில் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அருமையான காளான் 65 செய்வது எப்படி என்று காண்போம் வாங்க..!

தேவையான பொருட்கள்:-

காளான் – 200 கிராம்

எண்ணெய் – 1/2 லிட்டர்

சோள மாவு – 1 1/2 மேசைக்கரண்டி

மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி

கடலை மாவு – 2 மேசைக்கரண்டி

அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை 

அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஷ்ரூம் 65

200 கிராம் காளானை மண் இல்லாதவாறு சுத்தமாக கழுவி தனியாக வைத்து கொள்ளவும். இப்போது 65 மசாலாவை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

காளான் 65 செய்வதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளவும். 

அவற்றில் இரண்டு மேசைக்கரண்டி கடலை மாவு, சோள மாவு1 1/2 மேசைக்கரண்டி, அரிசி மாவு 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி, மல்லி தூள் 1/2 தேக்கரண்டி, 

மிளகு தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

முக்கிய குறிப்பு மாவானது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

பின்பு பிசைந்த மாவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள காளானை சேர்த்து திரும்பவும் ஒரு முறை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)