வெங்காயம் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?





வெங்காயம் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?

0

வெங்காயம் இல்லாத உணவை இந்திய இல்லங்களில் பார்க்கவே முடியாது. எந்த குழம்பு வகையாக இருந்தாலும் வெங்காயம் அவசியம். அதை சமைத்து சாப்பிடுவது தான் வழக்கம். 

வெங்காயம் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று, சினிமா பாடலில் வேண்டுமானால் வெங்காயத்தை சாதாரணமாக எடை போட்டு இருக்கலாம். 

ஆனால் அதன் பலன்களோ ஏராளம்...ஏராளம். பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயமானாலும், சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயமானாலும் இரண்டுமே அதிஅற்புத மருத்துவ குணம் வாய்ந்தவை. 

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய். 

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. 

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. 

வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைய உள்ளது. 

வெங்காயம் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?

வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேக வைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். ஆனால் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும். 

வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டால் லேசாக வாய் துர்நாற்றம் வீசும் என்று சங்கடப்படுவதுண்டு. அதைப் பார்த்தால் உடல் ஆரோக்கியம் கிடைக்காது. 

சாப்பிட்டு விட்டு சில புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். துர்நாற்றம் ஓடி விடும்.

சிறுநீரகப் பிரச்சினை முதல் உடல் எடை குறைவது, கொழுப்பைக் குறைப்பது வரை அத்தனை பிரச்சினைகளுக்கும் வெங்காயம் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.

அப்படி வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் அவை என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன தெரியுமா..? 

இதய ஆரோக்கியம் : 

இதய ஆரோக்கியம்

வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் தியோசல்பினேட்டுகள் இருக்கின்றன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன 

மற்றும் தியோசல்பினேட்டுகள் இரத்தத்தின் சீரான தன்மையை சரியாக வைத்திருக்க உதவுகிறது. 

இதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பல மடங்குகளால் குறைகிறது. 

கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் அறிக்கை, சிவப்பு வெங்காயத்தில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் எல்.டி.எல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன என்று கூறுகிறது. 

நெஞ்சு வலி

நெஞ்சு வலி

காரணமாக இதய உள்ள ரத்த நாளங்களில் இரத்தம் உறைவு ஏற்படுவதால் நெஞ்சு வலி ஏற்படும். பக்க வாதம் கூட அதனால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். 

அப்படி நெஞ்சுவலி பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறையும் பிரச்சினை சரியாகும். 

இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகவும் உணவாகவும் வெங்காயம் இருக்கும்.

வலுவான எலும்பு : 

வலுவான எலும்பு

யு.எஸ். வேளாண்மைத் துறையின் (யு.எஸ்.டி.ஏ) கருத்துப்படி, ஒரு வெங்காயத்தில் 25.3 மி.கி கால்சியம் உள்ளது. 

இந்த கால்சியம் அளவு வலுவான எலும்புகளுக்கு உதவுகிறது. எனவே வெங்காயம் சாப்பிடுவது சிறந்த எலும்பு ஆரோக்கியத்தை உருவாக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி : 

நோய் எதிர்ப்பு சக்தி

வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. 

மீடியேட்டர்ஸ் ஆஃப் அழற்சியின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, வெங்காயத்தின் வேதியியல் கலவை மிகவும் வலுவானது. 

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. 

சுவாசப்பாதையை சீராக்குகிறது : 

சுவாசப்பாதையை சீராக்குகிறது

வெங்காயம் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் நிறைவாக உள்ளன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சுவாச பிரச்சினைகளை சரி செய்வதில் ஒவ்வாமை முக்கிய பங்கு வகிக்கிறது. 

DARU ஜர்னல் ஆஃப் பார்மாசூட்டிகல் சயின்சஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெங்காயம் சாப்பிடுவது மூச்சுக் குழாயின் தசைகளில் ஒரு இளகுத் தன்மையை உருவாக்குகிறது. 

இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எளிதில் சுவாசிக்க உதவுகிறது. இதற்கு வெங்காயத்தில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் தான் காரணம். 

கண்களுக்கு நல்லது : 

கண்களுக்கு நல்லது

வெங்காயத்தில் உள்ள செலினியம் வைட்டமின் ஈ -யின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் கண் பிரச்சினையைத் தடுக்கிறது. இயற்கை கண் சொட்டுகளில் வெங்காய சாறும் சேர்க்கப்படுகிறது. 

பல்வலி

பல்வலி

பல்வலி உள்ளவர்கள் வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குணமாகும். 

குறிப்பாக, இரவு துங்கும் போது வைத்துக் கொண்டு படுத்தால் இடைஞ்சல் இல்லாமல் நீண்ட நேரம் வைத்திருக்க முடியும். 

தொடர்ந்து சொத்தைப் பல் உள்ள இடத்தில் இதை செய்து வந்தால், சொத்தைப் பல்லுக்குள் இருக்கும் புழுக்கள் கூட வெளியேறி விடும். 

பற்களில் பாக்டீரியாக்கள் தங்குவதை அழித்து பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

வாய் சுத்தம் : 

வாய் சுத்தம்

பலர் வெங்காயம் வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் என தவிர்ப்பார்கள். உண்மையில் அது துர்நாற்றத்தை போக்கி பாக்டீரியாக்களை அழிக்கும். 

வாய் சுத்தத்திற்கும் உதவுகிறது. அதில் உள்ள விட்டமின் சி வாய் சுகாதாரத்தை பாதுகாக்கிறது. 

செக்ஸ் வாழ்க்கைக்கு உதவுகிறது : 

செக்ஸ் வாழ்க்கைக்கு உதவுகிறது

ஆண்கள் விறைப்புத் தன்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது.

ஏனெனில் பயோமிகுலூஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெங்காயம் ஆண்களின் விறைப்புப் பிரச்னையை சரி செய்ய உதவுகிறது. 

இது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது என்றும் ஆய்வு கூறுகிறது. 

பொலிவான சருமம் : 

பொலிவான சருமம்

வெங்காயத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவை நிரம்பியுள்ளன. மேலும் அவை அனைத்து சருமத்திற்கும் உதவுகிறது . 

இந்த வைட்டமின்கள் நிறமியைப் போக்க உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. 

உங்கள் ஃபேஸ் பேக்கில் வெங்காய சாறும் கொஞ்சம் சேர்த்து தடவலாம். முகப்பரு, கீரல், காயம் இருப்பவர்கள் தவிர்க்கவும். 

இரத்த சோகை

இரத்த சோகை

வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும் தன்மை கொண்டது. 

இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனைகள் குணமாகும். 

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.

கூந்தல் அடர்த்தி : 

கூந்தல் அடர்த்தி

இதை நிரூபிக்க அதிக அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும், பல ஆயுர்வேத முடி தயாரிப்புகள் முடி வளர்ச்சிக்கு வெங்காய சாற்றைப் பயன்படுத்துகின்றன. 

மேலும், அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, வெங்காயம் பொடுகு மற்றும் பேன்களை நீக்கவும் உதவுகிறது. 

மாதவிடாய் பிரச்னைக்கு உதவுகிறது : 

மாதவிடாய் பிரச்னைக்கு உதவுகிறது

மார்பக புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெங்காயத்தை பசையாக அப்படியே உட்கொள்வது மாதவிடாய் நின்ற பின் உண்டாகும் 

அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. இதற்கு அதில் இருக்கும் கால்சியம் சத்தே காரணம். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)