பசும்பாலுக்கு பதில் தாவரத்தை அடிப்படையாக கொண்ட பால் குடிக்கலாம் !





பசும்பாலுக்கு பதில் தாவரத்தை அடிப்படையாக கொண்ட பால் குடிக்கலாம் !

0

இன்றைய காலத்தில் வேகன் எனப்படும் மாமிச உணவுகளை முற்றிலும் தவிர்த்து தன் வாழ்க்கை முழுவதும் காய்கறி மட்டுமே சாப்பிட்டு வாழக்கூடிய நபர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

பசும்பாலுக்கு பதில் தாவரத்தை அடிப்படையாக கொண்ட பால் குடிக்கலாம் !

அது இப்பொழுது ஒரு வாழ்க்கை முறையாகவே உருவாகி வருகிறது. மாமிச உணவு எனும் பெயரில் கணக்கிலடங்காத வாழ் விலங்குகளை கொள்ளும் வாழ்க்கை முறைக்கு எதிரான இந்த வேகன் முறையானது பராமரிக்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. உணவு மட்டுமின்றி உடை மற்ற பொருட்களுக்காக விலங்குகள் துன்புறுத்தப் படுவதை அவர்கள் அதிகம் வருந்துகின்றனர். 

பசும்பாலுக்கு பதில் தாவரத்தை அடிப்படையாக கொண்ட பால் குடிக்கலாம் !

மாமிச பொருட்கள் மட்டுமின்றி முட்டை, பால் சார்ந்த பொருட்களையும் இந்த வழி முறையைப் பின்பற்றுபவர்கள் தவிர்க்கின்றனர். 

மாட்டிலிருந்து கிடைக்கும் பாலுக்கு மாற்றாக வேறு செடி சார்ந்த பாலை குடித்தது புதுமையானது அல்ல.

ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக இந்த முறையில் உணவு சமைத்து சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள் இந்த கட்டுரையில் நாம் பாலுக்கு மாற்றாக வேறு செடியின் பால்களை பற்றி பார்க்கலாம்.

​பாலின் முக்கியத்துவம்

​பாலின் முக்கியத்துவம்

பாலில் இருக்கும் புரோட்டீன் நல்ல வைட்டமின் போன்ற சத்துக்கள் உடலுக்கு அவசியமான ஒன்றாகும். 

பாலில் கிடைக்கும் கால்சியம் இன்றியமையாத ஒன்றாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது. 

இந்த நிலையில் நாம் பாலை தவிர்ப்பது என்பது நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி திறனை குறைப்பது மற்றும் உடலுக்குத் தேவையான சக்தியினை பெறாமல் இருப்பது போன்ற ஆபத்தில் சிக்க வைக்க வாய்ப்புள்ளது 

அதிலிருந்து மீள்வதற்காக தான் நாம் இந்த மாற்று பால்களை குடிக்க பழகலாம்.

​சோயா பால்

​சோயா பால்

சோயா பால் சோயா பீன்ஸிலிருந்து பெறபடுகிறது .இதிலிருந்து பெறப்படும் பாலானது அதிக புரோட்டின் சத்தை கொண்டதாகும். 

ஒரு கப்பில் ஒன்பது முதல் 15 கிராம் வகைகளான சோயா பீன்ஸ் நாம் பாலாக அரைத்து குடித்து வந்தாலே நம் உடலுக்கு மிக அதிக அளவிலான புரோட்டின் சத்தினை பெற முடியும். 

அதுமட்டுமின்றி கால்சியம் அதிக அளவில் இந்த சோயாவில் இருப்பதோடு வைட்டமின் பி12 எனப்படும் அதிக சத்துக்கள் இந்த சோயாவில் நமக்கு கிடைக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் சோயாவிற்கு எதிரான அலை வீசியது மார்பகப் புற்றுநோய்க்கு அது காரணமாக இருப்பதாக அந்த காலகட்டத்தில் சொல்லப்பட்டது. 

ஆனால் வளர்ந்த இந்த மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப காலகட்டத்தில் சோயா நமது ரத்தம் சார்ந்த பிரச்சினைகளையும் 

மற்றும் மார்பகப் புற்று நோயையும் 28 சதவீதம் அளவிற்கு குறைகிறது. என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாம் பாலுக்கு மாற்றாக இந்த சோயாபால் தயாரித்து பயன்படுத்தலாம்.

சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம்,  கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன.

சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. 

சோயா உணவு கெட்ட கொலஸ்ட்ரால்  என்னும் LDL அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கிறது.

முந்திரி பால்

முந்திரி பால்

முந்திரி பால் என்றவுடன் என்னவோ, ஏதோ என்று திகைக்க வேண்டாம். முந்திரி பருப்பிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வகை பானம். 

இது பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மாற்று உணவுப் பொருளாகும். இதில் கேசின் புரதம் இருப்பதில்லை. எனவே பாலினை அருந்துவதால் உண்டாகும் ஒவ்வாவை ஏற்படுவதில்லை.

முந்திரி பால் கிரீம் கலரில் பளபளப்பாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். முந்திரி பாலானது தாவரத்திலிருந்து பெறப்படும் பருப்பிலிருந்து தயார் செய்யப்படுகிறது.

முந்திரி பாலில் இருக்கும் நல்ல சத்துக்கள் நமது இதயத்திற்கு அவசியமானதாகும். புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கு முந்திரி பால் மிக சிறந்த ஒன்றாகும். 

மேலும் அதில் இருக்கும் காரணிகள் நமது கண்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகும். 

சந்தையில் இது போன்ற தானியங்கள் அதிகம் கிடைத்தாலும் நல்ல இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தானியங்களை வாங்குவது தான் சிறந்த ஒன்றாகும்.

​பாதாம் பால்

​பாதாம் பால்

பாதாம் பால் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம். 

சுக்குப்பால், தேங்காய் பால், பருத்திப் பால், நிலக்கடலை பால் என நம்ம ஊரு பல்வேறு ருசியான பால்கள் வரிசையில் இது ஒரு வெளிநாட்டு இறக்குமதி பானம்.

பாதாம் பால் இப்பொழுதே நிறைய நபர்கள் பாதாம் பாலை குடிக்கின்றனர் .ஆனால் பாதாம் பருப்பை அரைத்து மாட்டு பாலில் கலந்து குடிக்கின்றன. 

பால் புரதம், சோயா புரதம் செரிமானத்தில் கோளாறு உள்ளவர்களுக்கு பாதாம் பால் குடிப்பதால் பாலின் மூலம் கிடைக்கும் தேவையான சத்துக்கள் கிடைத்து விடுகிறது. 

வேகன் டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு தாவரத்தில் அதாவது பாதாம் பருப்பில் இருந்து கிடைக்கும் பால். பசும்பாலை விட ஐம்பது சதவீதம் கலோரி அளவு குறைவு.

ஆனால் அது உண்மையான பாதாம் பால் அல்ல மாறாக ஒரு கப்பில் தேவையான அளவு பாதம் பருப்புகளை எடுத்து அதில் தண்ணீர் உற்றி ஊற வைத்து பிறகு அதை அரைத்து பாலை எடுக்க வேண்டும். 

அந்த பாலை குடிப்பதன் மூலம் மாட்டுப் பாலை விட 50% அதிகமான கால்சியம் சத்தினை பெறுவதுடன் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் கூடவே நமக்கு கிடைக்கின்றன.

ஓட்ஸ் பால்

ஓட்ஸ் பால்

ஓட்ஸ் பால் ஓட்ஸ் எனப்படும் ஒரு வகையான புல்லில் வளரும் அரிசியானது நமது சமூகத்தில் பரவலாக கிடைப்பது தான் ஓட்ஸில் இருக்கும் நார்ச்சத்துக்கள், 

நமது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் கட்டுப்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகள் இந்த உணவினை அதிகம் பயன்படுத்துகின்றனர். 

ஓட்ஸ் பால் குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனையில் இருந்து நம்மால் விடுபட முடியும் சந்தையில் நல்ல ஓட்ஸ் அரிசியினை கூட செயற்கையில் தயாரிக்கப்படும் ஓட்ஸ் விற்கப்படுகிறது. 

எனவே அதை வாங்குவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் மேலும் ஓட்ஸ் பாலினை இனிப்பாகவும் குடிக்கலாம் அல்லது காரமாகவும் குடிக்கலாம்.

​​தேங்காய் பால்

​​தேங்காய் பால்

தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால் பகிர்ந்து கொள்ளுங்கள். மக்கள் அறிந்து கொள்ளட்டும், தேங்காய் பயன்பாடு மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கை விட்டனர். 

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மை தான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகு மென்றால், அதை சமைக்கும் போது தான் தேங்காய் கொழுப்பாய் மாறும்!

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டு விட்டால், அது தான் அமிர்தம்.

சகல விதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

ஆசிய கண்டத்தில் தேங்காய்ப்பால் என்பது அன்றாட உலகத்தில் இருக்கக்கூடிய உணவு பொருளாகும். 

இதில் இருக்கும் அதிக அளவிலான மனித உடலுக்கு ஏற்ற நல்ல கொழுப்பு நமது தோல் இதயம் போன்ற உடல் உறுப்புகளுக்கு அதிக பலனை தரக்கூடியதாகவும், 

தேங்காய் பாலில் செய்யக்கூடிய சொதி குழம்பு என்ற உணவானது தென் தமிழகப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

தேங்காய் பாலினை பருகுவதன் மூலம் உங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் உங்கள் தோற்றத்தினையும் அழகாக்கலாம்.

​​சனல் பால்

​​சனல் பால்

சனல் பால் ஹெம்ப் எனப்படும் ஒரு வகையான தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த இந்தப் பாலில் அதிக அளவிலான எண்ணை சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் கிடைக்கின்றன. 

இதில் அதிக அளவிலான கால்சியம் இருப்பதால் பாலில் வேறு எந்த உணவு பொருளையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. 

மாறாக குறைந்த அளவிலான தண்ணீரை பயன்படுத்தி இந்த பாலை தயாரித்து குடிக்கலாம். உடலுக்கு அதிக அளவிலான சத்தினை தரக்கூடிய வல்லமை இந்த பால் இருக்கிறது. 

இது இந்திய சமூகத்தில் வளர்ந்து வரக்கூடிய ஒரு பால் வகையாகும். மாட்டுப்பாலிற்கு மாறாக இந்த தானியத்தில் தயாரிக்கப்படும். 

பால் குடிப்பது நமது உடல் மற்றும் நமது சூழல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பெரிதும் உதவக் கூடியதாகும் விலங்கு நல ஆர்வலர்களும் இந்த வகையான பாலை பருகுவதை அதிகம் ஆதரிக்கின்றனர்.

மாட்டுப் பாலில் கிடைக்கும் என சொல்லப்பட்டு வந்த கால்சியம், புரோட்டின், வைட்டமின் போன்ற சத்துக்கள் 

இந்த பால் வகைகளிலும் கிடைக்கும் என்றால் நாம் எதற்காக மாட்டை தொந்தரவு செய்ய வேண்டியதிருக்கிறது. 

எனவே மக்களே இந்த பாலினை பருகி உங்கள் உடல் நலனை பேணி காப்பது உடன் சக விலங்குகளையும் பாதுகாக்க முன் வரலாம்..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)