அகத்தி கீரை சாறு தயார் செய்வது எப்படி?





அகத்தி கீரை சாறு தயார் செய்வது எப்படி?

உடம்பிற்குள் உள்ள சூட்டை தணிக்கக் கூடியதால் தான், இதற்கு அகத்திக்கீரை என்றே பெயர் வந்தது. ஒரு பொருள் மலிவாக கிடைத்தாலே, அதற்கு பெரிதாக மனிதர்கள் மதிப்பு தருவதில்லை. 
அகத்தி கீரை சாறு தயார் செய்வது எப்படி?
அப்படிப்பட்டது தான் இந்த அகத்திக்கீரை. அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் நிறைந்த கீரை இது.. எல்லா காலத்திலும் வற்றாமல் கிடைக்க கூடியது. விலையோ குறைவானது. 

பிரசவித்த தாய்மார்களுக்கு, உடம்பில் சூடு சேர்ந்து விடும். அதே போல, கால்சியம், இரும்புச் சத்துக்களும் குறைந்து விடும். 

அதனால் தான், இந்த அகத்திக் கீரையை குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் சமைத்து தருவார்கள். எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதித் தன்மையை தரக்கூடியது.. தாய்ப்பால் பெருகும். 
அகத்திக்கீரை சாப்பிட்டால், பால் வளம் பெருகும் என்பதால் தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்கும் தீவனமாக தரப்படுகிறது. மற்ற கீரைகளை போல, இந்த கீரையில் உள்ள சத்துக்களை லிஸ்ட் போட முடியாது. 

காரணம், 50-க்கும் மேற்பட்ட உயிர்ச்சத்துகள் இதில் அடங்கி உள்ளன. ஜஸ்ட் 100 கிராம் கீரையில், 90000 உயிர்சத்தான வைட்டமின்கள் இருக்கிறதாம். 2 வகையான அகத்திக்கீரை உள்ளது. 
ஒன்று வெள்ளை நிற பூக்களையும், இன்னொன்று சிவப்பு நிற பூக்களையும் கொண்டது. பெரும்பாலும் வெள்ளைநிற பூக்களை கொண்ட கீரையைதான் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். 

கிட்டத்தட்ட இதுவும் முருங்கை மரம் போலத்தான். இந்த மரத்தின் எல்லா பகுதிகளுமே மருத்துவ மூலிகைத் தன்மை கொண்டது. 

சரி இனி அகத்திக்கீரை பயன்படுத்தி டேஸ்டியான அகத்திக்கீரை சாறு தயார் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானப்பொருட்கள்:
அகத்திக்கீரை - 1 கட்டு

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணை - 1 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
அகத்திக்கீரை சாறு
கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சற்று வதக்கவும். 

அத்துடன் கீரையை அலசிப் போட்டு, சீரகம், உப்பு சேர்க்கவும். அதில் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும்.

தேங்காயை நன்றாக அரைத்து வெந்தக் கீரையில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். 

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்ற வல்லது. இந்தச் சாற்றை வடிகட்டி சூப் போலவும் குடிக்கலாம்.

கவனிக்க:
இந்தச் சாற்றை வெறும் தண்ணீருக்குப் பதில், அரிசி கழுவிய நீரில் செயதால் இன்னும் சுவையாக இருக்கும்.
Tags: