தேவையானவை:
மைதா, கோதுமை மாவு, தக்காளி சாறு – தலா ஒரு கப்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
சீஸ் துருவல் – ஒரு கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மைதா, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், சீஸ் துருவல், உப்பு, தக்காளி சாறு எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும் (தேவைப் பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்).
மாவை அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.