தேவையானவை
கறுப்பு உளுந்து - 1 கப்
வெல்லம் - முக்கால் கப்
நெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வாணலி யில் உளுந்தை வறுத்து, ஆற வைத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் வெல்லம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி,
மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதி வந்த பிறகு, அரைத்து வைத்த உளுந்து மாவைப் போட்டுக் கிண்டவும்.
நெய்யைக் கையால் தொட்டு, உருண்டை செய்து, அதில் பாதாம் ஒட்டிப் பரிமாறலாம்.