பூரி மாவுடன் பீட்ரூட் கலந்து கவர்ச்சியான சிகப்பு நிற பூரி இரு தினங்களுக்கு முன் செய்தேன். அதனை இங்கு பகிர்ந்து கொள்ள விருப்பம்.
சுமார் 12 முதல் 15 பூரிகள் தயாரிக்கலாம்.
மாவு செய்ய தேவையானவை :
1 1/2 கப் கோதுமை மாவு
1/2 கப் மைதா
1/2 Tsp நெய்
1/2 Tsp எண்ணெய்
1/4 cup பீட்ரூட் துண்டுகள்
1/2 Tsp உப்பு
பூரி பொரிக்க தேவையான எண்ணெய்
பூரி மாவு திரட்ட சப்பாத்தி பிரஸ்
செய்முறை :
குக்கரில் பீட்ரூட் துண்டுகளை போட்டு கால் கப் தண்ணீர் விட்டு மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை தண்ணீர் குழாயின் கீழே வைத்து தண்ணீரை திறந்து விடவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து வெந்த பீட்ரூட்டை வேக வைத்த தண்ணீருடன் வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஆறிய பின்னர் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்.
இப்போது பூரி மாவு எவ்வாறு பிசைய வேண்டும் என காணலாம்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொள்ளவும்.
அதில் நெய்யையும் உப்பையும் சேர்க்கவும்.
கைகளால் பிசறி விடவும்.
அடுத்து அரைத்த பீட்ரூட் விழுதை சேர்த்து பிசையவும்.
மாவு ஒன்று சேர்ந்தாற் போல வந்தவுடன் 1 Tsp எண்ணெய் சேர்க்கவும்.
மறுபடியும் நன்கு பிசையவும்.
அழுத்தி பிசைய பிசைய மாவு நன்கு மிருதுவாக வரும்.
சிறு சிறு உருண்டைக ளாக உருட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
இப்போது பூரிகளை இட சப்பாத்தி அமுக்கும் கருவியை உபயோகிக் கலாம்.
இல்லையென்றால் வட்ட வட்டமாக பூரி கட்டை கொண்டு இடவும்.
இங்கு சப்பாத்தி ப்ரஸில் எப்படி இடுவது என பார்க்கலாம்.
ப்ரெசின் உள்ளே அடி தட்டிலும் மேல் தட்டிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
அடி தட்டின் மேல் உருட்டி வைத்துள்ள மாவை வைத்து மேல் தட்டால் மூடி கைப்பிடியால் அழுத்தம் கொடுத்து வட்ட வடிவ பூரியை உருவாக்கவும்.
அடி தட்டின் மேல் உருட்டி வைத்துள்ள மாவை வைத்து மேல் தட்டால் மூடி கைப்பிடியால் அழுத்தம் கொடுத்து வட்ட வடிவ பூரியை உருவாக்கவும்.
இவ்வாறு தட்டிய பூரி மிகவும் மெல்லிய தாகவும் இருக்க கூடாது.
தடிமனாக வும் இருக்கக் கூடாது.
ஒரே சீராக 1/2 mm தடிமன் உடையதாக இருக்கலாம்.
எண்ணெய் நன்கு புகை வரும் அளவுக்கு சூடாக இருக்க வேண்டும்.
திரட்டிய பூரி மாவை எண்ணெய்யில் மெதுவாக விடவும்.
போட்ட உடனேயே பந்து போல உப்பி மேலெழுந்து வரும்.
சாரணியால் அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடவும்.
இரண்டு பக்கமும் பொரிந்ததும் எண்ணையை வடித்து வேறு தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொன்றாக பொரித் தெடுக்கவும்.
எண்ணெயின் சூட்டை தேவைக் கேற்றவாறு அவ்வப்போது தீயை கூட்டி குறைத்து கொள்ளவும்.
உருளை கிழங்கு மசாலா செய்து இதனுடன் தொட்டு கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
உருளை கிழங்கு குருமா, காய்கறிகள் குருமா, தக்காளி சட்னி ஆகிய வற்றுடனும் அருமையாக இருக்கும்.
பூரியை ஒரு குழியான தட்டில் வைத்து பாலை ஊற்றி ஊற வைத்து சர்க்கரையை மேலே தூவி சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
பூரியுடன் ஜாம் மற்றும் வெல்லம் ஆகிய வற்றுடன் சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை!!
பள்ளிக்கு டிபன் பாக்ஸில் பூரியின் மேல் ஜாம் தடவி சுருட்டி வைத்து அனுப்பினால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆனால் ஹோட்டல்க ளிலும் வீடுகளிலும் பூரி கிழங்கு தான் மிகவும் பிரபலம்!!!....
ஆனால் பீட்ரூட் பூரி சிற்றுண்டி சாலையில் கிடைப்பது கடினம். நிறம் மட்டு மல்லாமல் சுவை மற்றும் இன்றி யமையாத சத்துக்களும் நிரம்பியுள்ளது இந்த பீட்ரூட் பூரியில் ... அதனால் வீட்டில் செய்து தான் பாருங்களேன்.