கும்பகோணம் மீன் பிரியாணி செய்வது எப்படி?





கும்பகோணம் மீன் பிரியாணி செய்வது எப்படி?

0
எப்பவும் சிக்கன் மட்டன் பிரியாணியை சாப்பிட்டு போரடித்து விட்ட அசைவப் பிரியர்களுக்கு இந்த மீன் பிரியாணி வித்தியாசமான அனுபவத்தை தரும். எப்படி செய்வது என பார்க்கலாம்.
மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
ரத்த சொந்த திருமணம் கண்களை பாதிக்கும் !
பாஸ்மதி அரிசி - 1 கிலோ

வஞ்சரம் மீன் - 1 கிலோ

தக்காளி - 1/2 கிலோ

பெரிய வெங்கயம் - 1/4 கிலோ

நெய் - 1/4 கப்

தயிர் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 5

கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 கப்

எலுமிச்சம் பழம் - 2

தனியாத் தூள் - 2 டீஸ்பூன்
ஒவ்வொரு காலகட்டத்திலும் கருவின் வளர்ச்சி எப்படி?
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை - சிறிதளவு

இஞ்சி, பூண்டு, பட்டை விழுது - 5 ஸ்பூன்

முந்திரி, திராட்சை - 20 கிராம்

சோம்பு, கசகசா - 3 ஸ்பூன்

ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி - 10 கிராம்

உப்பு - தேவைக்கு

ஏலக்காய் - 5

கறிவேப்பிலை, புதினா, கொத்த மல்லி - தலா 1 கைப்பிடி
கர்ப்ப கால நஞ்சு நோய் என்கிற ‘எக்ளாம்ப்சியா’ !
செய்முறை:
பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து, அதனுடன் உப்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து வேக வைத்து பாதி வெந்த பதத்தில் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.

பின், மீனை முள் நீக்கி சுத்தம் செய்து துண்டு போட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும். பட்டை, இஞ்சி, பூண்டு, சேர்த்து அரைக்கவும். சோம்பு, கசகசா இரண்டையும் அரைக்கவும். ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
கும்பகோணம் மீன் பிரியாணி
வணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் தக்காளி யையும் சேர்த்து நன்கு வதக்கவும். 

பின்பு புதினா, மல்லி தழை கறிவேப்பிலை,போட்டு வதக்கி. அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி, பூண்டு, பட்டை விழுது சேர்த்து வதக்கவும்.

அதனுடன் கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தயிர், ஜாதிக்காய் வாசனைப் பொடி, போட்டு அத்துடன் பச்சை மிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும். 

முந்திரி, திராட்சையை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காய த்தை போட்டு வதக்கிய பின்பு மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக்கவும். 
அடுத்து சாத்தை எடுத்து கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும். இதே போல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும். 

பின்பு குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும், ஒரு விசில் வரும் முன்னே அடுப்பை அனைத்து விடவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறலாம். கமகமக்கும் மீன் பிரியாணி ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)