இளைஞர்களின் உணவுகளில் அதிமுக்கிய இடம் பிடித்திருக்கும் ஒரு உணவு என்றால் அது பன்னீர் தான். எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும்.
பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளப் படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது.
அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக பன்னீர் மாறி விட்டது.
ஏனெனில் இறைச்சியை கொண்டு சமைக்கக் கூடிய அனைத்து விதமான உணவுகளையும் பன்னீர் கொண்டு நாம் சமைக்கலாம்.
ஆண்களுக்கு ஏற்படும் விந்தணுக்கள் தொடர்பான பிரச்சினைகளான உற்பத்தி குறைவு, தரம் குறைவு போன்ற பிரச்சினைக்ளுக்கு ஜிங்க் மிகச்சிறந்த மருந்தாகும்.
எனவே பன்னீரை தொடர்ந்து உணவில் சேர்ப்பது ஆண்மை குறைவிற்கான மிகச்சிறந்த தீர்வாகும். இன்று நாம் பன்னீருடன் பிரட் சேர்த்து எப்படி? பிரட் பனீர் உருண்டை செய்வதென்று பார்ப்போம்.
தேவையானவை:
பிரட் ஸ்லைஸ் – 10 (ஓரம் நீக்கவும்),
துருவிய பனீர் – 100 கிராம்,
உருளைக் கிழங்கு – ஒன்று (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்),
மிளகாய்த் தூள், உப்பு, மல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய் – 200 கிராம்.
செய்முறை:
துருவிய பனீர், மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, மிளகாய்த் தூள், மல்லித்தழை ஆகிய வற்றை சேர்த்து சிறிய உருண்டை களாக உருட்டவும்.
பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்து உடனடியாக உள்ளங்கையில் வைத்து பிழிந்து,
பனீர் மசாலா உருண்டையை அதில் வைத்து, நன்கு உருட்டி, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். பிரட் பன்னீர் உருண்டை ரெடி.