பொருளங்கா உருண்டை செய்முறை / Porulanka Urundai Recipe !





பொருளங்கா உருண்டை செய்முறை / Porulanka Urundai Recipe !

தேவையான பொருள்கள் :

வேர்க்கடலை - 2 கப்

வெல்லம் - ஒன்றரை கப்

பொட்டுக்கடலை - 1/2 கப்

எள் - 2 டீஸ்பூன்

அரிசி மாவு - 1 கப்

செய்முறை:

வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். பொட்டுக் கடலை, எள் இவற்றை 
பொருளங்கா உருண்டை
மிதமான சூட்டில் தனித்தனி யாக வறுத்துக் கொள்ளவும். ஏலக்காய் பொடித்துக் கொள்ளவும்.

இவை எல்லா வற்றையும் வெறும் வாணலியில் தான் வறுக்க வேண்டும். வறுத்த பொருள்கள் எல்லா வற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

பாகு காய்ச்சுதல்: கல்பதம்

கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்துப் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பி லேற்றவும். 

வெல்லம் கரைந்து நுரைத்துக் கொண்டு வரும்.சிறிது கவனமாக இருக்க வேண்டும்.இல்லை என்றால் பாகு தீய்ந்து விட வாய்ப்புண்டு.

ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு ஸ்பூனால் பாகிலிருந்து சிறிது எடுத்து தண்ணீரில் விட்டு 

கைகளால் உருட்டி எடுத்து ஒரு எவர்சில்வர் தட்டில் போட்டால் டங்கென்று சத்தம் வரவேண்டும்.அது தான் கல்பதம்.

இப்போது பாகை அடுப்பில் இருந்து இறக்கி கடலை கலவையில் ஊற்றி மத்தின் அடிப்பகுதி யால் நன்றாகக் கிளற வேண்டும்.

நல்ல சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்க வேண்டும்.அவ்வாறு பிடிக்கும் போது வெல்லம் பிசுபிசுவென கையில் ஒட்டும்.

மேலும் கலவை சூடாகவும் இருக்கும்.எனவே அரிசி மாவை தூவிக் கொண்டே உருண்டை பிடிக்க‌ வேண்டும். 

இப்போது நல்ல சத்தான, சுவையான சுமார் 15 உருண்டைகள் தயார்.

ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு மாலை வேளையில் சாப்பிடக் கொடுக்கலாம்.
Tags: