அருமையான சேமியா பொங்கல் செய்வது எப்படி?





அருமையான சேமியா பொங்கல் செய்வது எப்படி?

சேமியா பொங்கலுக்கு ரவை சேர்த்துத்தான் செய்ய வேண்டுமென்ப தில்லை. தனி சேமியாவில் செய்தாலும் சுவையாக இருக்கும். 
உப்பமா என்றாலே சிலருக்கு வெறுப்பாக இருக்கும்.அதிலும் சேமியா, ரவை உப்புமா என்றால் கேட்கவே வேண்டாம். 

உப்புமாவிற்கு பதிலாக இவற்றை வைத்து பொங்கலாக செய்யும் போது அதிலும் நெய்யில் மிளகு, சீரகத்தை வறுக்கும் வாசனை வந்தவுடன் உடனே சாப்பிடத் தோணும்.

தேவையானப் பொருள்கள்:

சேமியா - 2 கப்

ரவை - 1/2 கப்

பச்சைப் பருப்பு - 1/2 கப்

மஞ்சள் தூள் - சிறிது

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

நெய் - 2 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

முந்திரி - 10

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

கறிவேப்பிலை

செய்முறை:
சேமியா பொங்கல் செய்முறை
முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் சேமியாவை யும், ரவையையும் தனித்தனி யாக‌ சூடு வர வறுத்துக் கொள்ளவும்.

அடுத்து பச்சைப் பருப்பை நன்றாகக் கழுவி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள் களைத் தாளித்து, ஒரு பங்கு சேமியா & ரவைக்கு 

இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி விட்டு கொதி நிலை வரும் வரை மூடி வைக்கவும்.

பச்சைப் பருப்பு ஏற்கனவே வெந்திருப்ப தால் அதற்கு சேர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டாம். தண்ணீர் கொதி வந்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பச்சைப் பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கட்டித் தட்டாமல் கிளறி விட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

சேமியா வெந்ததும் ரவையைச் சிறிது சிறிதாகக் கொட்டி, கட்டித் தட்டாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

ரவை முழுவதையும் சேர்த்த பிறகு, நன்றாகக் கிளறி விட்டு அடுப்பி லிருந்து இறக்கி, மூடி வைக்கவும். இந்த சூட்டிலேயே ரவை வெந்து விடும். இப்போது சேமியா பொங்கல் சாப்பிடத் தயாராக உள்ளது.

இது நல்ல வாசனை யாகவும், சுவை யாகவும்,எளிதில் செய்யக் கூடியதாக வும் இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி தான் மிகப் பொருத்தம்.சாம்பாரும் நன்றாக இருக்கும்.
Tags: