காலை உணவில் சிறு தானியங் களை சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று சிறு தானியங் களை வைத்து பெசரட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முழு பாசிபயறு – 1/2 கப்
சோளம், தினை, குதிரைவாலி, வரகு கலந்து – 1 கப்
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 1
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பெருங்காயம் – விரும்பி னால் சேர்க்கலாம்
செய்முறை :
* வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிறுதானியம், பாசிபயறு சேர்த்து நாலு மணி நேரம் ஊற விடவும்.
* ஊற வைத்தை மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து உப்பு. பெருங்காயம் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி அதன் மேல் வெங்காய த்தை தூவி
சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். அடை போல வார்க்க லாம்.
சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். அடை போல வார்க்க லாம்.
* சத்தான டிபன் சிறுதானிய பெசரட்டு ரெடி.