பொங்கல் பண்டிகைக்கு ஏழு வகையான காய்கறிகளை (ஒற்றைப் படையில்) வைத்து குழம்பு செய்வது வழக்கம். இந்த குழப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரிக்காய், உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - இரண்டரை கப்
மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் (கால் இன்ச் நீள துண்டுகள்) - தலா அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
மைசூர் பருப்பு - 6 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 6 தேவையான அளவு
நெய் - 4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க
பெருங்காயம் - 1
துண்டு
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 6 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
மிளகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை கப்
தாளிக்க
கடுகு - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
நிலக்கடலை - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
செய்முறை :
துவரம் பருப்பு, மைசூர் பருப்பை நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வையுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முறையே
பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சேர்த்து சிவக்க வறுத்து,
ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரையுங்கள்.
புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.
பூசணி, பரங்கி, கத்திரிக்காய், வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டு களை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேக வைத்து கொள்ளவும்.
புளிக் கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரிக்காய் துண்டு களைச் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க வையுங்கள்.
நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேக வைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.
பத்து நிமிடம் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுட வைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து
குழம்பில் சேர்த்து கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக்குழம்பு தயார்.
இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம்.
ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய் கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்ய லாம்.
ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.