தேவையான பொருட்கள் :
உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்,
மாதுளை பழம் - 1,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
கொத்த மல்லி - சிறிதளவு,
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
கடலைப் பருப்பு - அரை டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு.
செய்முறை :
மாதுளை முத்துக் களை தனியாக உதிர்த்து வைக்கவும்.
கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு. பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர்
மஞ்சள் தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
இதனுடன் மாதுளை முத்துக்கள், வடித்த சாதம், எலுமிச்சைச் சாறு, கொத்த மல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சுவையான மாதுளை எலுமிச்சை சாதம் ரெடி!