அனைத்து வகையான பருப்பு வகைகளையும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது.
புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலையை செய்கின்றன. எப்பொழுதெல்லாம் நீங்கள் பலவீனமாக உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் பாசிப்பருப்பை சாப்பிட வேண்டும்.
ஜீரண மண்டலத்தை வலிமையாக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பாசிப் பருப்பில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.
இது செரிமான அமைப்பை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப்,
இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்),
பச்சை மிளகாய் – 2,
கொத்த மல்லி – சிறு கட்டு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சி, கொத்த மல்லியை சுத்தம் செய்யவும். பாசிப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லா வற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.
மாவை தோசைக் கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும்.