இஞ்சி குழம்பை இட்லி, தோசை, சாதம் என பல வகை உணவு களுடன் பரிமாறலாம்.
வயது வரம்பு இல்லாமல் இதை எல்லோரும் சாப்பிட லாம்.
குறைந்த நேரத்தில் அசத்த்லான சுவையில் இந்த குழம்பை தயார் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – 50 கிராம்
பூண்டு – 50 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
புளி – சிறிதளவு
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை – தாளிக்க
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்து ள்ளதை போட்டு
தாளித்து பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
* அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.
* இப்பொழுது தோல் சீவி அரைத்து வைத்தி ருக்கும் இஞ்சி மற்றும் மிளகு கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
* பின்னர் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
* புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அதை வதக்கிய வற்றுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
* ஒரு கொதி வந்ததும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
* மிளகாய் தூள் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கி உணவுடன் பரிமாற லாம்.