கிரிஸ்பியான சிக்கன் வறுவல் செய்வது எப்படி?





கிரிஸ்பியான சிக்கன் வறுவல் செய்வது எப்படி?

சிக்கன் 100 கிராமுக்கு 31 கிராம் ப்ரோடீன்(புரதம் ) உள்ளதால், சிக்கன்  புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. 
கிரிஸ்பியான சிக்கன் வறுவல் செய்வது எப்படி?
ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும். சிக்கனில்  உள்ள B வைட்டமின்கள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், 

பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேன்படுத்தவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். சிக்கனில் உள்ள வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்தும். 
அதிக அளவு ப்ரோடீன் கொண்ட உணவுகள் எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும், எடை குறைப்பதில் சிக்கன்  முக்கிய பங்கு வகிக்கும். 

சரி இனி சிக்கன் கொண்டு கிரிஸ்பியான சிக்கன் வறுவல் செய்வது எப்படி?  என்று பார்ப்போம்.
தேவையானப் பொருள்கள்:

சிக்கன் - 250 கிராம்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பூண்டு - 3 பற்கள்

சின்ன வெங்காயம் - 2

தக்காளி - பாதி

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தேங்காய்ப் பால் - 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

உப்பு - தேவை யான அளவு

கொத்து மல்லி இலை - ஒரு கொத்து
வறுத்துப் பொடிக்க:

கொத்து மல்லி விதை - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

கிராம்பு - 1

பிரிஞ்சி இலை - 1

முந்திரி - 2

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:
கிரிஸ்பியான சிக்கன் வறுவல் செய்வது எப்படி?
முதலில் சிக்கனை சிறுசிறு துண்டு களாக நறுக்கவும். ஒரு பாத்திர த்தில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொண்டு அதில் சிக்கனைப் போட்டுப் பிரட்டி ஒரு 5 நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு தண்னீர் ஊற்றி பச்சை வாடை போகும் வரை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒட்டப் பிழிந்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.

அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள், பாதி எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாகப் பிசைந்து சுமார் 1/2 மணி நேரத் திற்கு மூடி வைக்கவும்.

சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்வது எப்படி?

வெறும் வாணலியில் கொத்து மல்லி விதையை யும், சீரகத்தையும் தனித் தனியே வறுத்து, ஆறியதும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். 

இஞ்சி, பூண்டைத் தட்டி வைக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றி தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள் களைத் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.  நன்றாக வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கனைச் சேர்த்து வதக்கவும். அதுவும் நன்றாக வதங்கிய பின் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

சிக்கன் வறுவல்
இப்போது தேங்காய்ப் பால் சேர்த்து காரம், உப்பு சரி பார்த்து மூடி மிதமானத் தீயில் வேக விடவும். தண்ணீர் சேர்ப்ப தாக இருந்தால் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம். 

சிக்கனில் இருந்து வெளி வரும் நீரே அது வேக‌ போதுமானதாக இருக்கும். சிக்கன் பாதி வெந்த நிலையில் வறுத்துப் பொடித்த கொத்து மல்லிப் பொடியைப் போட்டுக் கிளறவும்.

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் ! 

(மிளகாய்த் தூளில் கொத்து மல்லி சேர்த்திருந்தாலும் புதிதாக வறுத்துப் பொடித்துப் போடும் போது வாசனையும், சுவையும் தூக்கலாக இருக்கும்.)

சிக்கன் நன்றாக வெந்து தண்னீர் எல்லாம் வற்றிய பிறகு எலுமிச்சை சாறு விட்டு, கொத்து மல்லி இலைத் தூவிக் கிளறி இறக்கவும்.

புதினா வாசனைப் பிடித்தமானால் கொத்து மல்லியுடன் இதையும் சேர்த்துப் போடலாம். இதை எல்லா வகையான சாதத்திற்கும் பக்க உணவாகப் பரிமாறலாம்.
Tags: