தேவையானப் பொருள்கள்:
மரவள்ளிக் கிழங்கு - 1 (நடுத்தர மானது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் கிழங்கை சிறுசிறு துண்டு களாக்கி சிறிது உப்பு போட்டு அவிக்கவும்.
பொரியல் செய்வதற் காக வென்றுத் தனியாக அவிக்க வேண்டு மென்ப தில்லை.
சமயங் களில் மீதமான அவித்த கிழங்கையும் பயன் படுத்த லாம். பிறகு மரவள்ளிக் கிழங்கை பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய் ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றன் பின் ஒன்றாகத்
தாளித்து கிழங்கைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்துக் கிளறி கொஞ்சம் தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வை.
தீ மிதமாக இருக் கட்டும். ஏற்கனவே கிழங்கு வெந்து விட்ட தால் தண்ணீர் நிறைய ஊற்ற வேண்டாம்.லேசாகத் தெளித் தால் போதும்.
எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கலந்ததும் கிளறி விட்டு, மிளகாய்த் தூள் வாடை இல்லாமல் சிவந்து வந்ததும் இறக்கு.
இது எல்லா வகை யான சாதத் திற்கும் பொருத்த மாக இருக்கும். அல்லது மாலை நேர சிற்றுண்டி யாகவும் சாப்பிட லாம்.