கலகலா இனிப்பான செய்முறை / Sweet spicy recipe !





கலகலா இனிப்பான செய்முறை / Sweet spicy recipe !

கலகலா, கல்கல், குல்குல் எனறு பல்வேறு பெயர்களில் அழைக்கப் படும், இந்த பலகாரம், கிறிஸ்துமஸ் பண்டிகை யின் பொழுது செய்யப் படும் 

கலகலா
ஒரு அருமை யான இனிப்புப் பண்டம். இதில் முட்டை, தேங்காய்ப் பால் சேர்த்து செய்வது வழக்கம்.

நான் முட்டையைத் தவிர்த்து விட்டு, இதை செய்தேன். மிகவும் சுவை யாகவே இருந்தது.

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

ரவா - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 1 கப்

பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

உப்பு - ஒரு சிட்டிகை

ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை

வெண்ணை அல்லது நெய் - 2 டீஸ்பூன்

வெதுவெதுப் பான பால் - 1/2 கப் அல்லது மாவு பிசைவ தற்கு தேவையான அளவு

எண்ணை - பொரிப் பதற்கு தேவை யான அளவு

செய்முறை:

மைதா, ரவா, பொடித்த சர்க்கரை, வெண்ணை, சமையல் சோடா, உப்பு ஆகிய வற்றை ஒரு பாத்திர த்தில் போட்டு, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். 

அதில் வெது வெதுப்பான பாலை சிறிது சிறிதாக விட்டு மாவை மிருது வாகப் பிசைந்துக் கொள்ளவும். 

குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

பிசைந்த மாவை, சிறிது எடுத்து ஒரு சிறு அருநெல்லிக் காய் அளவிற்கு உருட்டிக் கொள்ளவும். 

எல்லா மாவையும் சிறு சிறு உருண்டை களாக்கி வைக் கவும்.

ஒரு முள் கரண்டியின் பின் புறத்தில் சிறிது நெய்யைத் தடவி, அதன் மேல் ஒரு உருண் டையை வைத்து சற்று இழுத்து விட்டு நன்றாக அழுத்தவும். 

பின் அதை எடுத்து சுரு ட்டவும். சங்கு போன்ற வடிவத்தில் கிடைக்கும். எல்லா உருண்டை களையும் இப்படியே செய்யவும்.

ஒரு வாணலி யில் பொரிப்ப தற்கு தேவை யான எண்ணை யில் விட்டு சூடாக்கவும். 

எண்ணை காய்ந் ததும், செய்து வைத்தி ருக்கும் "கலகலாவை" கொஞ்சம் கொஞ்ச மாகப் போட்டு, பொன்னி றமாக பொரித் தெடுக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திர த்தில் சர்க்க ரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கொதித்து, 

ஒரு கம்பி பாகு பதத்திற்கு வநததும், ஏலக்காய்த் தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடவும். 

சர்க்கரை பாகில் பொரித்து வைத்துள்ள கலகலா வைப் போட்டு, பாகு அதன் மேல் நன்றாகப் படும்படி கிளறி எடுத்து, 

ஒரு தட்டில் கொட்டி, தனித் தனியாகப் பரப்பி விடவும். 
சற்று நேரத்தில், சர்க்கரை பாகு பூத்து கலகலா வின் மேல் படிந்து விடும். காற்று புகாத ஒரு டப்பா வில் போட்டு வைக்கவும்.

கவனிக்க: 

மேற்கண்ட முறை யில் செய்வது சற்று நேரம் பிடிக்கிம். நேரம் இல்லாத வர்கள், சிறு உருண்டை களாக உருட்டி செய்வ தற்குப் பதில், 

பெரிய எலுமிச்சம் பழ அளவி ற்கு மாவை எடுத்து, மெல்லிய சப்பாத்தி யாக இட்டு, கத்தியால் சிறு துண்டு களாக வெட்டி எடுத்தும் பொரிக்க லாம். 

இப்படி செய்வ தற்கு "துக்கடா" என்று சொல் வார்கள்.
Tags: