கணவாய் மீன் தொக்கு செய்முறை !





கணவாய் மீன் தொக்கு செய்முறை !

தேவையான பொருட்கள் : 

கணவாய் மீன் – அரை கிலோ 

வெங்காயம் – 1 

தக்காளி – 1 பச்சை 

மிளகாய் – 2 இஞ்சி, 

பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி 

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி 

சீரகதூள் – 2 ஸ்பூன் எண்ணெய் 

கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை. 

செய்முறை : 
கணவாய் மீன் தொக்கு
 * கணவா மீனை சுத்தமாக ஆய்ந்து கழுவி சிறிய துண்டுக ளாக வெட்டி கொள்ளுங்கள். 

* ஒரு வாணலில் கணவா மீனை போட்டு அதனுடன் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். 

* கணவா தலைகள் வேகும் போதே அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டி கீழே கொட்டி விடவும். இப்படிக் கொட்டி விடுவதால் கணவா மீனின் கவுச்சி வாடை கிட்டத்தட்ட முற்றிலுமாக போய் விடும். இப்போது அதை தனியாக வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

* வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தபின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். 

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். 

* பின் அதில் வேக வைத்த கணவா மீனை சேர்த்து சிறிது வதக்கிய பின், மிளகாய் துாள், சீரகப்பொடி, சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும்.

இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும். 

* நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்.

* கணவாய் மீன் வறுவல் ரெடி! * இதை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.
Tags: