மோருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?





மோருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

0

நாம் என்ன உணவு உட்கொள்கிறோம் என்பது தான் நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். 

மோருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
நம் உடலில் என்ன வகையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து உண்பது நம் ஆயுளில் பிரதிபலிக்கும். நமக்கு பிடித்த உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியம் தான். 

ஆனால் அதிலும் ஆரோக்கியத்தை பேணுவது நல்லது. ஆனால் சில உணவு வகைகளில் எது ஆரோக்கியமானது என்று அறிவதில் குழப்பம் ஏற்படும். 

அப்படியொரு குழப்பம் தான் தயிர் மற்றும் மோர் ஆகியவற்றின் இடையே பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுவது. சிலர் தயிரை சூடு என்றும் மோர் குளிர்ச்சி என்றும் கூறக் கேட்டிருப்போம், 

ஆனால் யார் எதை சாப்பிட வேண்டும் என்ற குழப்பமும் இருக்கும். எல்லாவற்றையும் இன்றோடு தீர்க்க தொடர்ந்து படிக்கவும். 

உங்கள் வீட்டின் மதிப்பு என்ன? உதவுகிறது இணையதளம் !

தயிர்

மோருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இந்து சடங்குகளில் அடிக்கடி தயாரிக்கப்படும் பஞ்சாமிருதத்தின் (Panchamrita) ஐந்து அமுதங்களில் தயிர் ஒன்றாகும். இந்தியாவின் பல பாகங்களில், உணவு தயிர் சேர்ப்பதனுடன் முடிவடையும். 

பழங்காலம் தொட்டே, தயிரானது ஜீரணம் மற்றும் அமில எதிர் விளைவுகளில் இருந்து நிவாரணம் பெற உணவில் சேர்த்து வழங்கப் பெற்றது. 

கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தயிர் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவோம். மேலும் தயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. 

விசேஷ உடல் அமைப்பை கொண்ட சில உயிரினங்கள் !

எனவே தயிரை சாப்பிடுவதால் எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.

மோர்

மோருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

மோர் என்பது பாலில் இருந்து பெறப்படும் நீர்மப் பொருட்களில் ஒன்று. தயிரிலிருந்து வெண்ணெயை அகற்றிய பின் கிடைக்கும் நீர்மப்பொருள் மோர் ஆகும். 

மோருடன் தேவைக்கேற்ப சிறிது உப்பு கலந்து குடிக்கலாம். இது சமையலுக்கும் பயன்படுத்தப் படுகிறது. பொதுவாக வெயில் காலங்களில் தான் மோர் தேவை அதிகமாக இருக்கும். 

உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் !

மழை காலங்களில் மோர் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் மழை காலங்களிலும் பனி காலங்களிலும் தான் மோர் குடிக்க வேண்டும். 

காரணம் இவை செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

தயிரா? மோரா?

மோருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

தயிர் மற்றும் மோர் இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இவற்றில் ஒன்றை தேர்வு செய்யும் போது நம்முடைய உடல் வாகு எப்படி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

மோர் உடல் சூட்டை தணிக்கும், ஆனால் தயிரில் உள்ள மூலக்கூறுகள் உடைவதற்கு நீண்ட நேரம் ஆகும். 

அதனால் டயட்டில் இருப்பவர்கள், எடை குறைக்க நினைப்பவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், 

கல்லீரல் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் தயிரை விட மோர் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மோருக்கும் தயிருக்கும் என்ன வித்தியாசம்?

மோருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
தயிர் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதும் மோர் உடலை குளிர்ச்சியாக வைக்கும் என்பதும் உண்மை தான். 

மோரும் தயிரிலிருந்து தானே வருகிறது, பிறகெப்படி இரண்டும் வேறு வேறு தன்மை கொண்டிருக்கிறது என்று கேட்கலாம். 

ஆனால் தயிரிலிருந்து மோராக மாற்றப்படும் செயல்முறையின் போது அது குளிர்ச்சியடைகிறது. 

ஏனெனில் தயிரின் மூலக்கூறுகள் அடித்து உடைக்கப்பட்டு அதிலுள்ள கொழுப்புத் தன்மை பெரிதளவில் பிரித்து எடுக்கப்பட்டு வெண்ணெய் தயாரிக்கப்படும். 

இஞ்சி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

அதனால் மோர் குடிக்கும் போது நம்முடைய உடல் மிகவும் இலகுவாக மாறுகிறது.

மோர் ஏன் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்?

மோருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

தயிர் ஜீரணமாவதற்கு நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் இரவு நேரங்களில தயிர் சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள்.

ஆனால் மோரில் அடர்த்தி குறைவு, நீர்த்தன்மை அதிகம் கொண்டது என்பதால் உடனடியாக ஜீரணமாகும். அது மட்டுமின்றி சரியான நேரத்துக்கு பசியைத் தூண்டும். 

எனவே அஜீரணக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லை பிரச்சனைகள் உள்ளவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு மோரை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். 

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும் !

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தயிருக்கு பதிலாக மோர் எடுத்துக் கொள்ளலாம். அப்போதும் மிக மிகக் குறைவான அளவு மட்டுமே தயிர் சேர்த்து அதில் நிறைய தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும்.

ஏன் தயிர் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்?

மோருக்கும் தயிருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது தவறு. அந்த நேரத்தில் நம்முடைய ஜீரண மண்டலம் மிக மெதுவாக செயல்படும். அதனால் ஜீரணமாவது மேலும் கடினமாகும். 

அப்படியே தயிர் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு சரியான நேரம் மதிய வேளை தான். மதிய நேரத்தில் நம்முடைய ஜீரண மண்டலம் அதிக வேகத்துடன் செயல்படும். 

ஆகையால் அந்த நேரத்தில் தயிர் எடுத்துக் கொள்வது நல்லது. அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை, வயிறு மந்தம் 

போன்ற பிரச்சினை இல்லாதவர்கள் உங்களுடைய உடல் தேறாமலே இருந்தால் எடையை கூட்டுவதற்கு தயிரை சாப்பிடலாம். 

ஆனால் மோர் எல்லா நேரத்திலும் எடுத்துக் கொள்ள முடியும். இது ஜீரணத்தை துரிதப் படுத்துவதால் குடலை சுத்தமாக வைக்கும். 

உடலில் கழிவுகளை தேங்காமல் தடுப்பதால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது.

பெண்களின் பிறப்புறுப்பு முடியை அகற்றுவது எப்படி?

உங்களால் தயிர் சேர்க்காமல் இருக்க முடியாதெனில் மோர் குடிக்கலாம். தயிரை பகல் நேரத்தில் சாப்பிடும் போது அத்துடன் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். 

அதுவே இரவில் சாப்பிடும் போது சர்க்கரை அல்லது மிளகுத் தூளை சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு வயிறும் குளிர்ச்சியடையும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)