நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மழைக்கால உணவுகள் !





நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மழைக்கால உணவுகள் !

0

மழைக்காலம் என்பது நாம் அனைவரும் ரசிக்கக் கூடிய ஒரு காலமாகும். நிறைய மழைத்துளிகள், பச்சை போர்வை போர்த்தியது போல ஊரே செழுமையாக இருக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மழைக்கால உணவுகள் !

இந்த நேரத்தில் உடலுக்கு என்று தனி கவனம் தேவைப்படுகிறது.  உடலில் எப்போதும் இல்லாத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். 

காலங்கள் மாறிக் கொண்டே தான் இருக்கின்றன. அதுவும் தற்போது மழைக்காலம் துவங்கி விட்டது. இந்த நேரத்தில் உங்கள் உணவு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம். 

ஆடிப்பெருக்கு என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன?

இல்லை என்றால் தேவையற்ற நோய்கள், உடல் பருமன் கூடுதல் மற்றும் இன்னபிற தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஐப்பசியை தொடர்ந்து மழை மற்றும் குளிர்காலம் இதமான தட்ப வெப்பம் இருக்கும். வெயிலின் தாக்கம் குறைவதால், மனது மட்டுமில்லை உடலும் ஒரு வித மந்தமான நிலையில் இருக்கும்.

இந்த ரம்மியமான சூழலை நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்க நம்முடைய உணவிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். 

காரணம், தட்ப வெப்ப மாற்றத்தினால் முதலில் நாம் அவதிப்படுவது அஜீரண பிரச்னை. இந்த காலக்கட்டத்தில் ஜீரண சக்தி குறைந்து, செரிமான பிரச்னை ஏற்படும்.

அதைத் தவிர்க்க, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட பழகிக் கொள்ள  வேண்டும். 

சுவையான உருளைக்கிழங்கு சமோசா செய்வது எப்படி?

மேலும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள பூண்டு, மிளகு, மஞ்சள், இஞ்சி போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

மழைக் காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். 

சிலருக்கு ஒத்துக் கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதை தீர்க்க சில உணவு வழிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

கண்டிப்பாக நம் உணவுப் பதார்த்தங்களில், மிளகு பொடியைச் சேர்த்துச் சமைப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும், விட்டமின் ‘சி’ சத்து நிறைந்த எலுமிச்சம், ஆரஞ்சு ஜூஸ் ஒத்துக் கொள்ளும். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மழைக்கால உணவுகள் !

சிலருக்கு இவை ஒத்துக் கொள்ளாது. சாப்பிட்டால் ஒன்றும் செய்யாது என்பவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தவிர்க்க வேண்டும்.

மழைக் காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக் கொள்ளாது. 

அத்தகையவர்கள் அவர்களுக்கு ஏற்ற காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது. 

ஒரு மாதம் காபி, டீ யை தவிர்ப்பதால் ஏற்படும் மாற்றங்கள் !

சூடாகச் சாப்பிட வேண்டுமென்று தோன்றும் போது பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல், அதற்கு பதிலாக உப்புமா உருண்டை, இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என சாப்பிடலாம். 

நாம் தினமும் சாப்பிடும் உணவையே சற்று சூடாகச் சாப்பிட்டால் போதும். எண்ணெயில் பொரிக்கப்படும் உணவைத் தவிர்த்து நீராவியில் தயார் செய்யும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

எந்த உணவாக இருந்தாலும், அதை சூடாக சாப்பிட வேண்டும். தண்ணீர் கூட வெது வெதுப்பாக பருக வேண்டும்.

வீட்டிலேயே நிலவேம்பு  கஷாயத்தினை காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து குடித்து வர நோய் தொற்று எதுவும் ஏற்படாது. பனியால் தோன்றும் பல நோய்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும்.

ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு இவற்றை தவிர்த்து காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவு களை மழைக் காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மழைக் காலங்களில் காய்கறிகளையும், கீரைகளையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.  கீரைகளை சமைக்கும் போது  நன்கு சுத்தப்படுத்தி செய்ய வேண்டும். 

ஆனால், நீர்ச்சத்து மிக்க காய்கறிகளான வெள்ளரி, பூசணி, புடலை, பீர்க்கன், சுரைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்.

பூமிக்கு அடியில் இருந்து பெறப்படும் உணவுகளையோ அல்லது பூமிக்கு மிக நெருக்கத்தில் உள்ள காய்களையோ தவிர்த்து மண்ணிலிருந்து உயரத்தில் வளர்ந்து இருக்கக் கூடிய கீரைகளையோ காய்கனிகளையோ சாப்பிடலாம்.

மதிய உணவுடன்  அவ்வப்போது தூதுவளை ரசம், மிளகு ரசம் வைத்து சாப்பிடுங்கள். இது செரிமானத்திற்கு உதவுவதுடன் ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை அருகில் வர விடாது.

இனி நெடுஞ்சாலைகளில் டிராக்... இதுக்கு எவ்வளவு கட்டணமோ தெரில !

மோர் தவிர இதர பால் பொருட்களான தயிர், வெண்ணெய் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டும்.

மழைக் காலங்களிலும் பழங்கள் சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். எல்லா சீசனுக்கும் பொருத்தமான பழங்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். 

அதற்காக வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக, சிட்ரஸ் சத்து நிறைந்த எலுமிச்சம், ஆரஞ்சு போன்ற பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.

இரவு தூங்குவதற்கு முன், பாலில் சிறிது மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து இளம் சூட்டில் குடிப்பது நல்லது. 

பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் ஆகியவை உடலில் அதிகரிப்பதற்கு நேரடியாக காய்கறிகளை உண்பது காரணமாக இருக்கும். 

கண்டிப்பாக மிதமான வெப்பம் இருக்கக்கூடிய தண்ணீரில் அவற்றினை சிறிது நேரம் வைத்து பின் நன்றாக அவித்து சாப்பிடுவது பலனை தரக்கூடியதாகவும் இருக்கும்.

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் :

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மழைக்கால உணவுகள் !

தெருவோரங்களில் விற்கப்படும் பிரைட் ரைஸ் மற்றும் வறுக்கப்பட்ட பல்வேறு துரித உணவுகளை கட்டாயம் இந்த மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். 

இந்த காலத்தில் இயல்பாகவே வெளிப்புறங்களில் பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிகள் அதிக அளவில் காணப்படும். 

அவை நம் உடலுக்குள் செல்வதற்கு இந்த உணவுகள் பயன்படும். இந்த உணவுகளை உண்பதால் உங்கள் உடல் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 

தண்ணீர் வழியாக பரவக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் இந்த மழை காலத்தில் அதிகமாக இருக்கும். 

இந்த நேரங்களில் நீங்கள் இறால், நண்டு, மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களை உண்பது சரியான தேர்வாக இருக்காது.

பாசிடிவ் வார்த்தைகளின் பலம் உணர்த்தும் கதை !

முடிவு

அசைவ உணவாக இருப்பின் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் சமையல் அறையில் தான் உள்ளது. 

மழைக் காலமோ, பனி காலமோ முறையான உணவுப் பழக்கம் இருந்தால் பல நோய் தொற்றுக்களை தவிர்த்து விட்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்  கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)