ருசியான மலபார் மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி?





ருசியான மலபார் மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி?

0

தற்போதைய உணவு பழக்க வழக்க முறை தான் மனிதனின் ஆயுட் காலத்தை நீடிக்கிறது,   விதவிதமான சாப்பாடு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. 

ருசியான மலபார் மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி?
அதிலும் அசைவம் என்றால் தனி சந்தோசம் தான். குறிப்பா அசைவ ப்ரியர்களில் மட்டன் சாப்பிடாதவர்கள் மிகவும் குறைவு தான். 

அசைவ உணவில் மட்டன் எனும் ஆட்டிறைச்சி மட்டும் மிகவும் ஆரோக்கியமானது. மட்டன் வெறும் சுவையையும் தாண்டி  மனிதர்களுக்கு பல்வேறு மருத்துவ பயன் தருகிறது. 

ஆட்டின் தலை, கால், கண், குடல் என அனைத்தும் பல்வேறு நன்மைகளை தருகிறது. 

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ?

ஆட்டிறைச்சி உண்பதால் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்கள், நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை நீக்கி, கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதை தடுக்கும். 

அதே போல் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் அது ரத்தச்சோகை வராமல் தடுக்கும். 

சரி இனி மட்டன் கொண்டு ருசியான மலபார் மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையானவை

மட்டன் - 600 கிராம்

வெங்காயம் - 1 (அரைத்தது)

தக்காளி - 1 (அரைத்தது)

இஞ்சி பூண்டு விழுது - 2 டீபூன்

மிளகாய் தூள் - 2 டீபூன்

மஞ்சள் தூள் - 1/2 டீபூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - சுவைக்கேற்ப

மசாலாவிற்கு

வெங்காயம் - 1 (நறுக்கியது)

வரமிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

சீரகப் பொடி - 2 டீபூன்

வெந்தயம் - 1/2 டீபூன்

மிளகுத் தூள் - 1/2 டீபூன்

கரம் மசாலா - 1/4 டீபூன்

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் பூன்

உப்பு - சுவைக்கேற்ப

நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு?

செய்முறை

ருசியான மலபார் மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி?

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, 

மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து பிரட், குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மட்டன் துண்டுகளைப் போட்டு, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். 

பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வரமிளகாய் சேர்த்து கிளற வேண்டும். 

பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி, வெந்தயம், மிளகுத் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 

நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் - எதற்காக? எங்கு நடந்தது தெரியுமா?
இந்நிலையில் வேக வைத்து இறக்கியுள்ள மட்டனை மசாலாவுடன் சேர்த்து கிளறிய பின் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 

நீரானது ஓரளவு வற்றியதும், அடுப்பை அணைத்து விட்டால், சுவையான மலபார் மட்டன் ரோஸ்ட் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)