அருமையான கரம் மசாலா பொடி செய்வது எப்படி?





அருமையான கரம் மசாலா பொடி செய்வது எப்படி?

மசாலா பொருட்களுக்கு புகழ் பெற்ற நாடு தான் இந்தியா. இங்கு ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் பல்வேறு வகையான மசாலா பொருட்களை நாம் பார்க்க முடியும். 
அருமையான கரம் மசாலா பொடி  செய்வது எப்படி?
அப்படி மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலாதான் கரம் மசாலா தூள். கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது. 

இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

கிராம்பு, இலவங்கபட்டை, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கருப்பு மிளகு இவற்றின் கலவையாக கரம் மசாலா உள்ளது. 

இந்திய உணவுகளில் சுவையையும் வாசனையையும் அதிகரிக்க முக்கிய பொருளாக கரம் மசாலா உள்ளது. 

ஆனால் உணவில் சுவையை சேர்ப்பதை தாண்டி இன்னும் பல விஷயங்களை கரம் மசாலா செய்கிறது. 
கரம் மசாலா பல தாதுக்களின் நன்மைகளை கொண்டுள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது.
தேவையான பொருள்கள் :.

தனியா - கால் கப்

ஏலக்காய் - 2 தேக்கரண்டி

கருப்பு ஏலக்காய் - 3

மிளகு - 2 தேக்கரண்டி

கிராம்பு - 2 தேக்கரண்டி

சோம்பு - ஒரு தேக்கரண்டி

அன்னாசிப்பூ - 4

ஒரு இன்ச் அளவில் பட்டை - 4

ஜாதிக்காய் - பாதி (அ) ஜாதிக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி

பிரியாணி இலை - 2

சிகப்பு மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
சீரகம் - 2 தேக்கரண்டி

ஜாதிபத்திரி - ஒன்று

பொடியாக நறுக்கிய காய்ந்த பூண்டு - ஒரு தேக்கரண்டி

சுக்கு - சிறிது (அ) சுக்குப்பொடி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
அருமையான கரம் மசாலா பொடி  செய்வது எப்படி?
தேவையான வற்றை அளந்து எடுத்துக் கொள்ளவும். கருப்பு ஏலக்காய், சுக்கு, ஜாதிக்காயை நசுக்கி வைக்கவும்.

ஒவ்வொன்றாக சிறுதீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக சூடு போக ஆற வைக்கவும். 
நோய்களுக்கு நோ என்ட்ரி சொல்லும் ஸ்ட்ராபெர்ரி !
ஆறியதும் விரும்பிய பதத்தில் அரைக்கவும். மணமான கரம் மசாலா பொடி தயார்.
Tags: