பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன மாற்றங்கள் நடக்கும்?





பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன மாற்றங்கள் நடக்கும்?

0

பேரிச்சம் பழத்தில் வளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும். 

பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன மாற்றங்கள் நடக்கும்?
குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். 

வைட்டமின் ‘ஏ’ குறைவினால் தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். 

மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். 

இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். ஆனால் அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். 

அதோடு ஊற வைத்த பாலிலும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. 

அந்த வகையில் பசும் பாலுடன், பேரீச்சம் பழத்தை சேர்த்து உட்கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

அதிலும் குறிப்பாக பாலில் பேரிச்சம் பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் அது பல நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. 

​சிறந்த ஆக்சிஜனேற்றி

​சிறந்த ஆக்சிஜனேற்றி

உலர் பழமான பேரிச்சை ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. முக்கியமாக இதில் பினோலிக்ஸ் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகமாக உள்ளன. 

இவை மட்டுமின்றி, பேரிச்சையில் இரும்புச் சத்து, பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, 

டயட்டரி பைபர், புரதச் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளன.

​ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

மறுபக்கம் இதில் சேர்க்கப்படும் பாலில், கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமின்றி இரும்புச் சத்து, வைட்டமின் பி- 12, துத்தநாகம், 

பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகளும் பாலில் உள்ளன. 

பால் குறித்த ஆய்வு ஒன்றில், 18 அமினோ அமிலங்களும், சுமார் 44 ஊட்டச் சத்துக்களும், 9 தாதுக்கள், 10 வைட்டமின்கள், 

ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சர்க்கரை விரும்பாதவர்களுக்கும் பேரிச்சை இனிப்பில் பால் குடிப்பது இன்னும் கூடுதல் பலன் தானே...சரி 

அப்படி ஊற வைத்த பாலிலும் பேரிச்சம்பழத்திலும் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.

இருமல் 

இருமல்

பேரிச்சம்பழம் ஊற வைத்த பாலில் கொஞ்சம் தேனும் கலந்து வெது வெதுப்பான பாலை குடிக்கும் போது நீடித்த இருமலை போக்க முடியும். 

இதற்கு பாலில் சில பேரிச்சைகளை போட்டு கொதிக்க வைத்து சூடாக குடித்தால் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

​ஹீமோகுளோபினை அதிகரிக்கும்

​ஹீமோகுளோபினை அதிகரிக்கும்

இருப்புச் சத்து பேரிச்சையில் உள்ள முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினின் உற்பத்திக்கு இன்றியமையாதது. 

இது பற்றி நடத்தபட்ட ஆய்வில், பேரிட்சையை பாலில் ஊற வைத்து விட்டு, பின்னர் அதனை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வேக வைத்து, ஆரோக்கியமான நபர்களுக்கு

(அதாவது 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள்) தினமும் காலையில் வெறும் வயிற்றில் வழங்கப்பட்டது. 

இதனால் ஒரு கால கட்டத்தில் அவர்களின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தது. மேலும், இரத்த சோகை தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பேரிச்சை உதவுகிறது.

எலும்புகள் வலுவாக

எலும்புகள் வலுவாக

பேரிச்சம்பழம் வேக வைத்த பாலை குடித்து வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும். குறிப்பாக எலும்பு தேய்மானத்தை தடுக்கும். சோம்பேறித் தனத்தை நீக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

​கர்ப்பிணிகளுக்கு பேரிச்சை

​கர்ப்பிணிகளுக்கு பேரிச்சை

பசும் பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், அது அவர்களுக்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் ஏராளமான சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கின்றன. 

அதே போல் பேரிச்சம் பழம் மற்றும் பால் கலவையை தவறாமல் உட்கொள்வது கருவில் உள்ள குழந்தைக்கு உறுதியான எலும்புகள் மற்றும் 

அதிக அளவிலான ரத்தத்தை உருவாக்க வலி வகை செய்யும் என்று இது குறித்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்த பசும் பால் மற்றும் பேரிச்சை கலவையை செய்ய, கறந்த பசும் பாலில் 5- ல் இருந்து 6 பேரிச்சம் பழங்களை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். 

பின்னர் காலையில் எழுந்தவுடன், அதனை அரைத்து பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து அருந்தலாம்.

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்ட ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இருக்காது. அவர்கள் இந்தப் பாலை குடித்து வந்தால் நரம்பு மண்டலம் சீராகும். 

மலட்டுத் தன்மை பிரச்சனை நீங்கும். தாம்பத்திய உறவில் ஆர்வம் ஏற்படும். சளி, இருமல் உள்ளவர்கள், வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்கள் இந்த பாலை குடிக்கலாம்.

ஆல்கஹால் அதிகம் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த பால் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

இதனை அடிக்கடி குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ரத்த அழுத்தம் சரியாகும்.

​முக சுருக்கங்களில் இருந்து விடுபட

​முக சுருக்கங்களில் இருந்து விடுபட

பேரிச்சம் பழம் மற்றும் பாலில் ஏராளமான ஆக்ஸிஜனேற்ற கலவைகள் உள்ளன. அவை முகத்தில் ஏற்படும் வயதான அறிகுறியான சுருக்கங்களை அகற்ற உதவுகின்றன. 

இந்த பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் சருமத்திற்கு சிறந்தது. முக சுருக்கத்தை நீக்க விரும்புவோர் உலர்ந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக் கூடாது 

என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், இது நேரெதிராக வேலை செய்யும். பாலில் ஊற வைத்த பேரிச்சையுடன் தேன் கலந்து, அதனை அரைத்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். 

அந்த பேஸ்டை முகத்தில் பேக் போல இட்டுக் கொண்டு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடவும். 

வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ் பேக் செய்து போட்டுக் கொண்டால் முக சுருக்கம் நீங்கி இளமையாக நீங்கள் காட்சியளிப்பீர்கள்.

​ஸ்டாமினா அதிகரிக்க

​ஸ்டாமினா அதிகரிக்க

பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது ஒருவரின் ஸ்டாமினா என்று கூறப்படும் ஆற்றலை அதிகரிக்க உதவும். 

பாலில் ஊற வைத்த பேரிச்சை ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் அடர்த்தியான உணவாக செயல்பட்டு உங்களின் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.

​கருவுறுதலை மேம்படுத்த

​கருவுறுதலை மேம்படுத்த

பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் எடுத்துக் கொள்வது பெண்களுக்கு கருவுறுதலை மேம்படுத்த உதவும். 

இந்த கலவையில் பைட்டோ கெமிக்கல்ஸ் கலவைகள் இருப்பதால், இது கருவுருதலுக்கு உதவும் என்று தெரிகிறது. இது பெண்களுக்கு முதிர்ந்த பெண் முட்டைகளை உருவாக்க உதவுகிறது. 

கரு முட்டையின் தரம் மற்றும் கர்ப்பப் பையில் கரு சரியாக தரிப்பதற்கும் பேரிச்சம் பழம் உதவி புரிகிறது. அதுமட்டுமின்றி, இது ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கிறது. 

கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து மேம்படுத்த பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.

ஆண்மைக்கு

ஆண்மைக்கு

பேரிச்சம் பழம் படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும். அதற்கு இரவில் படுக்கும் போது ஆட்டுப் பாலில் ஒரு கையளவு பேரிச்சம் பழத்தை ஊற வைத்து, 

மறுநாள் காலையில் அதனை பாலுடன் சேர்த்து அரைத்து, தேன் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும்.

பேரிட்சையை பாலில் மட்டும் ஊற வைப்பது ஏன்? என்ன காரணம்?

​என்ன காரணம்?

 பேரிட்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பாலில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. இது நமது உடலுக்கு தேவையான ஆற்றலையும், பலத்தையும் வழங்கும். 

தினமும் காலையில் உணவுக்கு முன் வெறும் வயிற்றில் இந்த பேரிட்சை மற்றும் பால் கலந்த இந்த பானத்தைக் குடிக்கவும். 

இதனுடைய அதிகபட்ச நன்மைகளைப் பெற மெட்ஜூல் மற்றும் ஈரானிய பேரிச்சை பழத்தை பயன்படுத்தலாம். 

குறிப்பாக, பேரிச்சம் பழத்தை ஊற வைப்பதற்கு முன் அது சுத்தமான உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின்பு பாலில் ஊற வைக்க வேண்டும்.

பேரீச்சம் பழத்தை சாப்பிடுவது எப்படி?

பேரீச்சம் பழத்தை சாப்பிடுவது எப்படி?

முதலில் இரண்டு பேரீச்சம் பழத்தை எடுத்து கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அதை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு பால் லேசாக ஆறிய பிறகு அதில் தேவையான அளவு தேன் கலந்து குடிக்க வேண்டும். பிறகு பாலில் வேக வைத்த பேரிச்சம் பழத்தையும் சாப்பிட வேண்டும்.

இதனை இரவில் தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இதனை ஆண்கள் பெண்கள் என அனைவரும் குடிக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)