சோளம் சேமியா வித் கிரவுண்நட் செய்வது எப்படி?





சோளம் சேமியா வித் கிரவுண்நட் செய்வது எப்படி?

0

உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை. இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும். 

சோளம் சேமியா வித் கிரவுண்நட்

நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது.  

நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளது. 

ஏழைகளின் பாதாம் நிலக்கடலையில், உடலுக்கு தேவையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் B போன்ற சத்துக்கள் உள்ளன. 

தினமும் ஊற வைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம். வேர்க்கடலையில் இதயத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. 

பல்வேறு இதய பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். சேமியாவில் பாயாசம், உப்புமா, கேசரி, இனிப்பு பலகாரங்கள் என பல விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. 

ஆனால் இந்த சோளம் சேமியா வித் கிரவுண்நட் செய்து பாத்திருக்கீங்களா... ட்ரை பண்ணி பாருங்க சேமியாவை பிடிக்காதவர்களுக்கும் பிடித்து போகும்.

தேவையானவை :

சோளம் சேமியா - 200 கிராம்,

பொடித்த வேர்க்கடலை - 1/4 கப்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,

எலுமிச்சைச்சாறு - சிறிது.

உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

தாளிக்க...

கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,

நறுக்கிய வெங்காயம் - 1,

கறிவேப்பிலை - 10 இலைகள்,

எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :

சுடுநீரில் உப்பு, எண்ணெய் கலந்து சோளம் சேமியாவை சேர்த்து வடிகட்டி அலசி உதிர்க்கவும். 

கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கி, வேர்க்கடலை பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, உதிர்த்த சோளம் சேமியா சேர்த்து கிளறி, எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)