தேவையானவை:
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 1,
மிளகாய் தூள் - ஒன்றே கால் டேபிள் ஸ்பூன்,
மல்லித் தூள் - அரை டேபிள் ஸ்பூன்,
தூள் உப்பு - தேவைக்கேற்ப,
கரம் மசாலா தூள் - கால் டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
சோம்பு - அரை ஸ்பூன்,
எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்,
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
கூழ் வற்றலை சுடு தண்ணீரில் வேக வைத்து, பின் உப்பு சேர்த்து 5 நிமிடங்களில் நீரை வடித்து விடவும். வாணலியில் எண்ணெயைச் சுட வைத்து
சோம்பு போட்டு தாளித்து பெரிய வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கியதும், அதில் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். பொடிகளின் பச்சை வாடை போனதும் வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கி, 1 ஸ்பூன் தக்காளி சாஸ் விட்டு கிளறி பரிமாறவும்.
அருமையான சைட் டிஷ் இது.